நெல்லையில் விடிய விடிய பெய்த கன மழை காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை: நெல்லையில் விடிய விடிய பெய்த கன மழை காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. தேன் தமிழகமான நெல்லை மற்றும் கன்னியாகுமரி பகுதியில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், சாலைகள் முழுவதுமாக நீரில் மூழ்கின.
நெல்லையில், இரவு தொடங்கிய மழை அதிகாலை வரை நீடித்தது. இதன் காரணமாக குற்றாலத்தில் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பேரருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி ஆகிய அருவிகளில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோடைக்காலம் தொடங்கிய நிலையில் குற்றாலத்திற்கு அதிக சுற்றுலா பயணிகள் சென்றனர். தற்போது அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா வந்த பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
தமிழகம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. தேன் தமிழகமான நெல்லை மற்றும் கன்னியாகுமரி பகுதியில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், சாலைகள் முழுவதுமாக நீரில் மூழ்கின.
நெல்லையில், இரவு தொடங்கிய மழை அதிகாலை வரை நீடித்தது. இதன் காரணமாக குற்றாலத்தில் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பேரருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி ஆகிய அருவிகளில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோடைக்காலம் தொடங்கிய நிலையில் குற்றாலத்திற்கு அதிக சுற்றுலா பயணிகள் சென்றனர். தற்போது அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா வந்த பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.