கோவையில் மின் வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

கோவையை அடுத்த மத்திபாளையம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று உயிரிழந்தது.

கோவை: கோவையை அடுத்த மத்திபாளையம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று உயிரிழந்தது.

மதுக்கரை வனச் சரகத்திற்கு உட்பட்ட மத்திபாளையம் பகுதியில் சந்திரன் என்பவருக்குச் சொந்தமான பண்ணை ஒன்று உள்ளது. அந்த பண்ணையில் சூரிய ஒளியில் இயங்கும் மின் வேலி அமைக்கப்பட்டுள்ளது. வன விலங்குகள் பண்ணைக்குள் புகுந்துவிடாமல் இருப்பதற்காக அந்த மின் வேலி அமைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அங்கு வந்த 35 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று மின் வேலியில் சிக்கி உயிரிழந்தது.



இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்றனர். அப்போது, வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்ததாக தகவல் விடுத்தும் அதை விரட்ட வனத்துறையினர் கால தாமதமாக வந்ததாகக் கூறி அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



இதனைத் தொடர்ந்து, கால்நடைத் துறை மருத்துவர் மனோகரன் தலைமையிலான மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த யானையை உடற்கூறு ஆய்விற்காக எடுத்துச் சென்றனர். யானை உயிரிழப்புக்குக் காரணமான பண்ணை உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...