மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே நீராவி எஞ்சின் மூலம் இயங்கும் பாரம்பரிய கோடைக்கால சிறப்பு ரயில் சேவைகள் வரும் 31-ம் தேதி முதல் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே நீராவி எஞ்சின் மூலம் இயங்கும் பாரம்பரிய கோடைக்கால சிறப்பு ரயில் சேவைகள் வரும் 31-ம் தேதி முதல் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தென்னக ரயில்வே, சேலம் கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "நீலகிரி மலை ரயில் ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையை ஏற்று, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மாவின் முயற்சியின் காரணமாக, வரும் 31-ம் தேதி முதல் ஜுன் 24-ம் தேதி வரை அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மேட்டுப்பாளையம் குன்னூர் இடையே நீராவி எஞ்சின் மூலம் (26+26 மொத்தம்) 52 பாரம்பரிய கோடைக்கால சிறப்பு ரயில் சேவைகள் இயக்கப்பட உள்ளன.
இந்த ரயிலில் 2 முதல்வகுப்பு மற்றும் ஒரு இரண்டாம் வகுப்பு முன்பதிவு பெட்டிகள் இருக்கும். இந்த ரயில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு, கல்லார், ஹில்குரோவ் வழியாக பயணித்து குன்னூரை மதியம் 12.30 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கத்தில் மதியம் 1.30 மணிக்கு குன்னூரில் இருந்து புறப்பட்டு, ஹில்குரோவ், கல்லார் வழியாக பயணித்து மேட்டுப்பாளையத்தை மாலை 04.20 மணிக்கு வந்தடையும்.
இந்த சிறப்பு ரயில்களுக்கான கட்டண முன்பதிவு நாளை (14.03.2018) காலை 8.00 மணி முதல் தொடங்க உள்ளதால், சுற்றுலாப் பயணிகளும், இதர ரயில் பயணிகளும் இதற்கு தேவையான வரவேற்பு அளித்து இந்த சேவைகளை பெரும் வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது," என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டண விபரம் :
முதல் வகுப்பு :
மேட்டுப்பாளையம் - குன்னூர் : பெரியவர்கள் : Rs. 1,100/- குழந்தைகள் : Rs. 650/- (5 முதல் 12 வயது வரை)
குன்னூர் மேட்டுப்பாளையம்: பெரியவர்கள் : Rs. 1,100 /- குழந்தைகள் : Rs. 650 /- (5 முதல் 12 வயது வரை)
இரண்டாம் வகுப்பு:
மேட்டுப்பாளையம் - குன்னூர் : பெரியவர்கள் : Rs.800 /- குழந்தைகள் : Rs. 500 /-(5 முதல் 12 வயது வரை)
குன்னூர் - மேட்டுப்பாளையம்: பெரியவர்கள் : Rs. 800 /- குழந்தைகள் : Rs. 500 /-(5 முதல் 12 வயது வரை)
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பயணச்சீட்டு வாங்க வேண்டியதில்லை.
இது தொடர்பாக தென்னக ரயில்வே, சேலம் கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "நீலகிரி மலை ரயில் ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையை ஏற்று, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மாவின் முயற்சியின் காரணமாக, வரும் 31-ம் தேதி முதல் ஜுன் 24-ம் தேதி வரை அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மேட்டுப்பாளையம் குன்னூர் இடையே நீராவி எஞ்சின் மூலம் (26+26 மொத்தம்) 52 பாரம்பரிய கோடைக்கால சிறப்பு ரயில் சேவைகள் இயக்கப்பட உள்ளன.
இந்த ரயிலில் 2 முதல்வகுப்பு மற்றும் ஒரு இரண்டாம் வகுப்பு முன்பதிவு பெட்டிகள் இருக்கும். இந்த ரயில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு, கல்லார், ஹில்குரோவ் வழியாக பயணித்து குன்னூரை மதியம் 12.30 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கத்தில் மதியம் 1.30 மணிக்கு குன்னூரில் இருந்து புறப்பட்டு, ஹில்குரோவ், கல்லார் வழியாக பயணித்து மேட்டுப்பாளையத்தை மாலை 04.20 மணிக்கு வந்தடையும்.
இந்த சிறப்பு ரயில்களுக்கான கட்டண முன்பதிவு நாளை (14.03.2018) காலை 8.00 மணி முதல் தொடங்க உள்ளதால், சுற்றுலாப் பயணிகளும், இதர ரயில் பயணிகளும் இதற்கு தேவையான வரவேற்பு அளித்து இந்த சேவைகளை பெரும் வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது," என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டண விபரம் :
முதல் வகுப்பு :
மேட்டுப்பாளையம் - குன்னூர் : பெரியவர்கள் : Rs. 1,100/- குழந்தைகள் : Rs. 650/- (5 முதல் 12 வயது வரை)
குன்னூர் மேட்டுப்பாளையம்: பெரியவர்கள் : Rs. 1,100 /- குழந்தைகள் : Rs. 650 /- (5 முதல் 12 வயது வரை)
இரண்டாம் வகுப்பு:
மேட்டுப்பாளையம் - குன்னூர் : பெரியவர்கள் : Rs.800 /- குழந்தைகள் : Rs. 500 /-(5 முதல் 12 வயது வரை)
குன்னூர் - மேட்டுப்பாளையம்: பெரியவர்கள் : Rs. 800 /- குழந்தைகள் : Rs. 500 /-(5 முதல் 12 வயது வரை)
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பயணச்சீட்டு வாங்க வேண்டியதில்லை.