மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே கோடைக்கால சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு

மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே நீராவி எஞ்சின் மூலம் இயங்கும் பாரம்பரிய கோடைக்கால சிறப்பு ரயில் சேவைகள் வரும் 31-ம் தேதி முதல் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே நீராவி எஞ்சின் மூலம் இயங்கும் பாரம்பரிய கோடைக்கால சிறப்பு ரயில் சேவைகள் வரும் 31-ம் தேதி முதல் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக தென்னக ரயில்வே, சேலம் கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "நீலகிரி மலை ரயில் ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையை ஏற்று, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மாவின் முயற்சியின் காரணமாக, வரும் 31-ம் தேதி முதல் ஜுன் 24-ம் தேதி வரை அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மேட்டுப்பாளையம் குன்னூர் இடையே நீராவி எஞ்சின் மூலம் (26+26 மொத்தம்) 52 பாரம்பரிய கோடைக்கால சிறப்பு ரயில் சேவைகள் இயக்கப்பட உள்ளன. 

இந்த ரயிலில் 2 முதல்வகுப்பு மற்றும் ஒரு இரண்டாம் வகுப்பு முன்பதிவு பெட்டிகள் இருக்கும். இந்த ரயில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு, கல்லார், ஹில்குரோவ் வழியாக பயணித்து குன்னூரை மதியம் 12.30 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கத்தில் மதியம் 1.30 மணிக்கு குன்னூரில் இருந்து புறப்பட்டு, ஹில்குரோவ், கல்லார் வழியாக பயணித்து மேட்டுப்பாளையத்தை மாலை 04.20 மணிக்கு வந்தடையும்.

இந்த சிறப்பு ரயில்களுக்கான கட்டண முன்பதிவு நாளை (14.03.2018) காலை 8.00 மணி முதல் தொடங்க உள்ளதால், சுற்றுலாப் பயணிகளும், இதர ரயில் பயணிகளும் இதற்கு தேவையான வரவேற்பு அளித்து இந்த சேவைகளை பெரும் வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது," என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டண விபரம் :

முதல் வகுப்பு :

மேட்டுப்பாளையம் - குன்னூர் : பெரியவர்கள் : Rs. 1,100/- குழந்தைகள் : Rs. 650/- (5 முதல் 12 வயது வரை)

குன்னூர் மேட்டுப்பாளையம்: பெரியவர்கள் : Rs. 1,100 /- குழந்தைகள் : Rs. 650 /- (5 முதல் 12 வயது வரை)

இரண்டாம் வகுப்பு:

மேட்டுப்பாளையம் - குன்னூர் : பெரியவர்கள் : Rs.800 /- குழந்தைகள் : Rs. 500 /-(5 முதல் 12 வயது வரை)

குன்னூர் - மேட்டுப்பாளையம்: பெரியவர்கள் : Rs. 800 /- குழந்தைகள் : Rs. 500 /-(5 முதல் 12 வயது வரை)

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பயணச்சீட்டு வாங்க வேண்டியதில்லை.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...