தேனி மாவட்டம் குரங்கணி தீவிபத்தில் உடன் சென்றவர்களை காப்பாற்றிவிட்டு, 100 சதவீத தீக்காயங்களுடன் உயிரிழந்த நிஷா என்ற இளம்பெண்ணின் உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது.
தருமபுரி : தேனி மாவட்டம் குரங்கணி தீவிபத்தில் உடன் சென்றவர்களை காப்பாற்றிவிட்டு, 100 சதவீத தீக்காயங்களுடன் உயிரிழந்த நிஷா என்ற இளம்பெண்ணின் உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் தமிழ்ஒளி. இவர் சென்னையில் மத்திய தொழிலாளர் வைப்பு நிதி அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவராவார். இவருக்கு நிஷா, நிரோஷா என இரு மகள்கள் உள்ளனர். இதில், மூத்த மகள் நிஷா (30), பி.டெக். முடித்து இங்கிலாந்தில் எம்.எஸ். முடித்துள்ளார். தற்போது, சென்னையில் எல்.என்.டி நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வந்தார்.
கடந்த 8-ந் தேதி உலக மகளிர் தினத்தன்று ஏற்பாடு செய்யப்பட்ட மலையேறும் பயிற்சிக்காக சென்னையிலிருந்து புறப்பட்டு 9-ந் தேதி காலை தேனியை சென்றடைந்துள்ளனர். அங்கு 11-ம் தேதி ஏற்பட்ட காட்டுத் தீயில் டிரெக்கிங் சென்றவர்கள் தீயில் சிக்கிக் கொண்டனர். அப்போது, தன் உயிரையும் பொருட்படுத்தாமல் மற்றவர்களுக்கு வழிகாட்டிய நிஷா, 100 சதவீத தீக்காயங்களுடன் உயிரிழந்தார்.
திருமணம் செய்து கொள்ளாத நிஷா பல வருடங்களாக டிரெக்கிங் சென்று வந்துள்ளார். இவர், டிரெக்கிங் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நிஷாவின் உடல் இன்று காலை பாப்பிரெட்டிப்பட்டியில் அடக்கம் செய்யப்பட்டது.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் தமிழ்ஒளி. இவர் சென்னையில் மத்திய தொழிலாளர் வைப்பு நிதி அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவராவார். இவருக்கு நிஷா, நிரோஷா என இரு மகள்கள் உள்ளனர். இதில், மூத்த மகள் நிஷா (30), பி.டெக். முடித்து இங்கிலாந்தில் எம்.எஸ். முடித்துள்ளார். தற்போது, சென்னையில் எல்.என்.டி நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வந்தார்.
கடந்த 8-ந் தேதி உலக மகளிர் தினத்தன்று ஏற்பாடு செய்யப்பட்ட மலையேறும் பயிற்சிக்காக சென்னையிலிருந்து புறப்பட்டு 9-ந் தேதி காலை தேனியை சென்றடைந்துள்ளனர். அங்கு 11-ம் தேதி ஏற்பட்ட காட்டுத் தீயில் டிரெக்கிங் சென்றவர்கள் தீயில் சிக்கிக் கொண்டனர். அப்போது, தன் உயிரையும் பொருட்படுத்தாமல் மற்றவர்களுக்கு வழிகாட்டிய நிஷா, 100 சதவீத தீக்காயங்களுடன் உயிரிழந்தார்.
திருமணம் செய்து கொள்ளாத நிஷா பல வருடங்களாக டிரெக்கிங் சென்று வந்துள்ளார். இவர், டிரெக்கிங் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நிஷாவின் உடல் இன்று காலை பாப்பிரெட்டிப்பட்டியில் அடக்கம் செய்யப்பட்டது.