நெருப்பில் சிக்கியவர்களை காப்பாற்றிவிட்டு உயிர்நீத்த நிஷாவின் உடல் அடக்கம்

தேனி மாவட்டம் குரங்கணி தீவிபத்தில் உடன் சென்றவர்களை காப்பாற்றிவிட்டு, 100 சதவீத தீக்காயங்களுடன் உயிரிழந்த நிஷா என்ற இளம்பெண்ணின் உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது.

தருமபுரி : தேனி மாவட்டம் குரங்கணி தீவிபத்தில் உடன் சென்றவர்களை காப்பாற்றிவிட்டு, 100 சதவீத தீக்காயங்களுடன் உயிரிழந்த நிஷா என்ற இளம்பெண்ணின் உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது. 

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் தமிழ்ஒளி. இவர் சென்னையில் மத்திய தொழிலாளர் வைப்பு நிதி அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவராவார். இவருக்கு நிஷா, நிரோஷா என இரு மகள்கள் உள்ளனர். இதில், மூத்த மகள் நிஷா (30), பி.டெக். முடித்து இங்கிலாந்தில் எம்.எஸ். முடித்துள்ளார். தற்போது, சென்னையில் எல்.என்.டி நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வந்தார். 

கடந்த 8-ந் தேதி உலக மகளிர் தினத்தன்று ஏற்பாடு செய்யப்பட்ட மலையேறும் பயிற்சிக்காக சென்னையிலிருந்து புறப்பட்டு 9-ந் தேதி காலை தேனியை சென்றடைந்துள்ளனர். அங்கு 11-ம் தேதி ஏற்பட்ட காட்டுத் தீயில் டிரெக்கிங் சென்றவர்கள் தீயில் சிக்கிக் கொண்டனர். அப்போது, தன் உயிரையும் பொருட்படுத்தாமல் மற்றவர்களுக்கு வழிகாட்டிய நிஷா, 100 சதவீத தீக்காயங்களுடன் உயிரிழந்தார். 

திருமணம் செய்து கொள்ளாத நிஷா பல வருடங்களாக டிரெக்கிங் சென்று வந்துள்ளார். இவர், டிரெக்கிங் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நிஷாவின் உடல் இன்று காலை பாப்பிரெட்டிப்பட்டியில் அடக்கம் செய்யப்பட்டது. 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...