தூய்மை இந்தியா திட்டம் : கோவையைச் சேர்ந்த அமைப்பிற்கு பிரதமர் விருது

கழிவு மேலாண்மையில் சிறந்து விளங்கிய கோவையைச் சேர்ந்த 'நோ டம்பிங்' என்ற அமைப்பிற்கு மத்திய அரசின் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

கோவை : கழிவு மேலாண்மையில் சிறந்து விளங்கிய கோவையைச் சேர்ந்த 'நோ டம்பிங்' என்ற அமைப்பிற்கு மத்திய அரசின் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. 

கடந்த 2016-ம் ஆண்டு 'நோ டம்பிங்' என்ற சமூக சேவைக்கான அமைப்பை கோவையைச் சேர்ந்த பிரசாந்த், சரண்ராஜ் மற்றும் சுரேஷ் பண்டாரி ஆகியோர் உருவாக்கினர். இவர்கள், இந்த அமைப்பின் மூலம் கோவை மாநகராட்சிக்கு கழிவு மேலாண்மையின் மூலம் உதவி வருகின்றனர். மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் குடியிருப்புகளில் சேரும் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக பிரித்து நகரை தூய்மைப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சிறந்து விளங்கிய 'நோ டம்பிங்' அமைப்பிற்கு பிரதமர் விருது வழங்கப்பட்டது. 

'நோ டம்பிங்' அமைப்பின் மூலம் தற்போது கோவையில் நாள்தோறும் 43 குடியிருப்பு நலச் சங்கங்கள், 4,200-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் விமானநிலையம் போன்ற இடங்களில் இருந்து 5 டன்னிற்கும் மேலான குப்பைகள் பிரித்தெடுக்கப்படுகிறது. 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...