வரி செலுத்தாத குடியிருப்புகளின் குடிநீர் இணைப்பைத் துண்டித்த மாநகராட்சி

கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணம் மற்றும் சொத்துவரியை கட்டாத குடியிருப்புகளின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

கோவை : கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணம் மற்றும் சொத்துவரியை கட்டாத குடியிருப்புகளின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 

மாநகராட்சி ஆணையாளர் டாக்டர். க.விஜயகார்த்திகேயன் உத்தரவின்படி, கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், வார்டு எண் 83-க்குட்பட்ட இராஜ வீதியிலுள்ள திரு.கே.ஐ.எட்வினின் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணம் மொத்தம் ரூ. 16,845ஐ செலுத்தாத காரணத்தினால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும், வார்டு எண் 25-க்குட்பட்ட தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உரிமைதாரர்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி மற்றும் குடிநீர் கட்டணம் மொத்தம் ரூ. 27,796 இதுவரை செலுத்தாத காரணத்தினால் இன்று குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

எனவே, பொதுமக்கள் மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம் மற்றும் இதர கட்டணங்களை உடனடியாக செலுத்தி குடிநீர் இணைப்பைத் துண்டிப்பதை தவிர்க்குமாறு மாநகராட்சி ஆணையாளர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...