இந்தியாவில் மத வெறி ஆட்சி நடைபெறுகிறது : நல்லகண்ணு கடும் தாக்கு

தலைவர்கள் சிலைகளை சேதப்படுத்துவது வழக்கமாகி விட்டதாகவும், இந்தியாவில் மத வெறி ஆட்சி நடைபெற்று வருவதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நல்லகண்ணு கூறியுள்ளார்.

திருப்பூர் : தலைவர்கள் சிலைகளை சேதப்படுத்துவது வழக்கமாகி விட்டதாகவும், இந்தியாவில் மத வெறி ஆட்சி நடைபெற்று வருவதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நல்லகண்ணு கூறியுள்ளார். 

திருப்பூரில் மாவட்டம் உடுமலையில் சங்கர் சமூக நீதி அறக்கட்டளை அறிமுக விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், " தலைவர்கள் சிலைகளை சேதப்படுத்துவது இங்கு வழக்கமாகிவிட்டது. ஏனெனில், இந்தியாவில் மத வெறி கொண்ட ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்பேத்கர், பெரியார் குறித்து கல்வி நிலையங்களில் பாடங்கள் வராமல் தடுக்கிறார்கள். ஆனால், சமஸ்கிருதத்தை முக்கிய பாடமாக புகுத்தி வருகின்றனர். இந்தியா என்பதை விட இந்து மதம் தான் முக்கியம் என்ற எண்ணத்தில் பாரதிய ஜனதா அரசு செயல்பட்டு வருகிறது. கல்லூரிகளில் சமஸ்கிருதத்தை நுழைத்து பெரியார் மற்றும் அக்பேத்கர் கொள்கைகளை புறக்கணிக்கின்றனர். 

மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படுவதை விட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. விவசாய நிலங்களில் டவர் லைன் அமைக்கக் கூடாது." என்று அவர் பேசினார். 

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...