தொழில் பயிற்சி குறித்த கருத்தரங்கில் கலந்து கொள்ள பழங்குடி மக்களுக்கு அழைப்பு

தொழில் நிறுவன மைய திறன் பயிற்சி கருத்தரங்கில் கலந்து கொள்ள தேசிய பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு கோவை மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

கோவை: தொழில் நிறுவன மைய திறன் பயிற்சி கருத்தரங்கில் கலந்து கொள்ள தேசிய பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு கோவை மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. 

இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- 

பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான தொழில் நிறுவன மைய திறன் பயிற்சி கருத்தரங்கு வரும் 14-ம் தேதி காலை 10.00 மணியளவில் அவினாசி சாலையில் உள்ள இந்திய தொழில் வர்த்தக சபை கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.

மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட தேசிய பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான தொழில் நிறுவன மையம், சிறப்பு பிரிவினரை ஊக்குவிக்கும் ஒரு அருமையான சுற்றுச்சூழலை உருவாக்கித் தருகிறது. 

இந்த மையத்தின் மூலம் சிறப்பு பிரிவினரின் தொழில் திறன் மேம்படுத்தப்பட்டு, பொது கொள்முதல் செயல்முறைகளில் திறம்பட பங்கேற்க உதவுகிறது. எனவே, இந்த பயிற்சி கூட்டரங்கில் கலந்து கொண்டு, வாய்ப்புகளைப் பயன்படுத்தி, தொழில்களைத் துவங்கி, அரசு திட்டங்களின் வாயிலாக பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...