அரசுத்துறையில் பணியின் போது இறந்தவர்களின் வாரிசுகளுக்கு பணி நியமனம்

பெருநகர சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம் மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் ஆகிய துறைகளில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான 473 பணியாளர்களின் வாரிசு தாரர்களுக்கு, கருணை அடிப்படையில், இளநிலை உதவியாளர், வருவாய் உதவியாளர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கு பணி நியமன ஆணைகள் இன்று வழங்கப்பட்டது.

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம் மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் ஆகிய துறைகளில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான 473 பணியாளர்களின் வாரிசு தாரர்களுக்கு, கருணை அடிப்படையில், இளநிலை உதவியாளர், வருவாய் உதவியாளர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கு பணி நியமன ஆணைகள் இன்று வழங்கப்பட்டது.



முன்னதாக, 16 பேருக்கு இந்த பணி நியமன ஆணைகளை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி வழங்கினார். அதன் தொடர்ச்சியாக, பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள அம்மா மாளிகையில், நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதமுள்ள வாரிசு தாரர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் தா.கார்த்திகேயன், நகராட்சி நிர்வாக ஆணையர் கோ.பிரகாஷ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...