மேட்டுப்பாளையம் பகுதிகளில் வறண்டு வரும் நீராதாரங்களால் பறவையினங்கள் நீர் நிலைகளைத் தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.
கோவை: மேட்டுப்பாளையம் பகுதிகளில் வறண்டு வரும் நீராதாரங்களால் பறவையினங்கள் நீர் நிலைகளைத் தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை அதிகாரப்பூர்வமாக 525 பறவையினங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் பல வகை பறவைகள் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள மேட்டுப்பாளையம் பகுதிக்கு வந்து தங்கிச் செல்கின்றன.
மேட்டுப்பாளையத்தில் உள்ள பசுமை சூழ்ந்த காட்டாற்று படுகைகள், நீர் தேக்கங்கள் மற்றும் குட்டைகளில் இவை ஆயிரக்கணக்கில் காணப்படும். குறிப்பாக சர்வதேச இயற்கை பாதுகாப்பு கழகத்தால் (ஐ.யு.சி.என்) அழிவு நிலையில் உள்ள பறவையாக அறிவிக்கப்பட்டுள்ள 'பாம்புதாரா' என்னும் நீர்ப்பறவைகளை இப்பகுதியில் காணலாம். பாம்பு போல் வளைந்து நெளிந்து காணப்படும் நீண்ட கழுத்தை கொண்ட பாம்புதாரா பறவைகள் மீன்களை உணவாகக் கொள்ளும். இதே போல் நீர் காக்கைகள், கொக்குகள், நாரைகள், அருவாமூக்கன் போன்ற உள்நாட்டுப் பறவைகள் மட்டுமின்றி பல்வேறு அரிய வகை வெளிநாட்டு பறவையினங்களையும் இங்கு காண இயலும்.
ஆனால், கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் போதிய மழை பெய்யாமல் பொய்த்துப் போனதால் பல்லாண்டுகளாக பறவைகளை ஈர்த்த பல்வேறு நீர்நிலைகள் தற்போது வறண்டு கிடக்கின்றன. இதனால், தற்போது ஓரளவு நீருடன் காணப்படும் லிங்காபுரம் நீர்த்தேக்க பகுதி மற்றும் பெள்ளாதி குட்டை போன்ற இடங்களுக்கு பறவைகள் படையெடுக்கின்றன. ஏராளமான பறவைகள் அந்த நீர் நிலைகளில் இருக்கும் குறைந்த நீரில் உணவைத் தேடுகின்றன. விரைவில் கோடை மழை பெய்யாவிட்டால் இந்த நீராதாரங்களும் வறண்டு பறவைகளின் வாழ்வாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்படும் என்பதே இயற்கை ஆர்வலர்களின் அச்சமாக உள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை அதிகாரப்பூர்வமாக 525 பறவையினங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் பல வகை பறவைகள் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள மேட்டுப்பாளையம் பகுதிக்கு வந்து தங்கிச் செல்கின்றன.
மேட்டுப்பாளையத்தில் உள்ள பசுமை சூழ்ந்த காட்டாற்று படுகைகள், நீர் தேக்கங்கள் மற்றும் குட்டைகளில் இவை ஆயிரக்கணக்கில் காணப்படும். குறிப்பாக சர்வதேச இயற்கை பாதுகாப்பு கழகத்தால் (ஐ.யு.சி.என்) அழிவு நிலையில் உள்ள பறவையாக அறிவிக்கப்பட்டுள்ள 'பாம்புதாரா' என்னும் நீர்ப்பறவைகளை இப்பகுதியில் காணலாம். பாம்பு போல் வளைந்து நெளிந்து காணப்படும் நீண்ட கழுத்தை கொண்ட பாம்புதாரா பறவைகள் மீன்களை உணவாகக் கொள்ளும். இதே போல் நீர் காக்கைகள், கொக்குகள், நாரைகள், அருவாமூக்கன் போன்ற உள்நாட்டுப் பறவைகள் மட்டுமின்றி பல்வேறு அரிய வகை வெளிநாட்டு பறவையினங்களையும் இங்கு காண இயலும்.
ஆனால், கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் போதிய மழை பெய்யாமல் பொய்த்துப் போனதால் பல்லாண்டுகளாக பறவைகளை ஈர்த்த பல்வேறு நீர்நிலைகள் தற்போது வறண்டு கிடக்கின்றன. இதனால், தற்போது ஓரளவு நீருடன் காணப்படும் லிங்காபுரம் நீர்த்தேக்க பகுதி மற்றும் பெள்ளாதி குட்டை போன்ற இடங்களுக்கு பறவைகள் படையெடுக்கின்றன. ஏராளமான பறவைகள் அந்த நீர் நிலைகளில் இருக்கும் குறைந்த நீரில் உணவைத் தேடுகின்றன. விரைவில் கோடை மழை பெய்யாவிட்டால் இந்த நீராதாரங்களும் வறண்டு பறவைகளின் வாழ்வாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்படும் என்பதே இயற்கை ஆர்வலர்களின் அச்சமாக உள்ளது.