சத்தீஸ்கர் மாநிலம் சுக்மாவில் மாவோயிஸ்ட்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 9 சி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிரிழந்தனர்.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மாவில் மாவோயிஸ்ட்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 9 சி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிரிழந்தனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் பல மாவட்டங்களில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்களை ஒடுக்கும் பணியில் சி.ஆர்.பி.எப், போலீஸ் அதிரடிப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சுக்மா மாவட்டத்தின் கிஸ்தாரம் பகுதியில் இன்று சி.ஆர்.பி.எப் 212-வது பட்டாலியனைச் சேர்ந்த வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, மண்ணில் புதைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை மாவோயிஸ்ட்கள் வெடிக்க வைத்தனர். இந்தக் கோர தாக்குதலில் 9 வீரர்கள் பலியாகினர். மேலும், 6 வீரர்கள் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் பல மாவட்டங்களில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்களை ஒடுக்கும் பணியில் சி.ஆர்.பி.எப், போலீஸ் அதிரடிப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சுக்மா மாவட்டத்தின் கிஸ்தாரம் பகுதியில் இன்று சி.ஆர்.பி.எப் 212-வது பட்டாலியனைச் சேர்ந்த வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, மண்ணில் புதைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை மாவோயிஸ்ட்கள் வெடிக்க வைத்தனர். இந்தக் கோர தாக்குதலில் 9 வீரர்கள் பலியாகினர். மேலும், 6 வீரர்கள் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.