மாலத்தீவு அருகே நிலை கொண்ட காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்புள்ளதால், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது
மாலத்தீவு அருகே நிலை கொண்ட காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்புள்ளதால், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இலங்கை அருகே தென்மேற்கு வங்கக் கடலில் கடந்த 8-ந்தேதி திடீரென குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுப்பெற்றுக் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இதன் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களான ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட கடல் பகுதியில் சூறாவளி காற்றும், பலத்த மழையும் பெய்யுமென்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது.
இந்த நிலையில், இன்று காலை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :- குமரி கடல் பகுதியில் மையம் கொண்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மாலத்தீவு நோக்கி நகர்கிறது. இந்தத் தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறும் வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் தென்மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளாவின் தென் பகுதியிலும் பலத்த மழை பெய்யுமென்று கூறப்பட்டுள்ளது. இந்த மழை இன்று முதல் வருகிற 15-ந்தேதி வரை 3 நாட்களுக்குப் பெய்யும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை முதல் பலத்த மழையும், ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகின்றது.
குமரி மீனவர்களுக்கு எச்சரிக்கை :
கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் இன்று முதல் 15-ம் தேதிகளில் கடலுக்கு செல்ல வேண்டாம். குறிப்பாக, மாலத்தீவுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.