குரங்கணி தீவிபத்தில் படுகாயமடைந்த இளம்பெண் உயிரிழப்பு : பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு

தேனி மாவட்டம் குரங்கணி தீவிபத்தில் படுகாயமடைந்த ஈரோட்டைச் சேர்ந்த இளம்பெண் சிகிச்சை பலினின்றி உயிரிழந்ததைத் தொடர்ந்து, பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

தேனி மாவட்டம் குரங்கணி தீவிபத்தில் படுகாயமடைந்த ஈரோட்டைச் சேர்ந்த இளம்பெண் சிகிச்சை பலினின்றி உயிரிழந்ததைத் தொடர்ந்து, பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

போடி அருகே குரங்கணி காட்டுப் பகுதியில் மலையேற்றப் பயிற்சிக்கு சென்ற சுற்றுலா பயணிகள் காட்டுத்தீயில் சிக்கினர். இவர்களில், ஆறு பெண்கள் உட்பட 10 பேர் பலியாகினர். 17 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈரோடு மாவட்டம் அய்யம்பாளையத்தை சேர்ந்த திவ்யா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

மதுரை அரசு மருத்துவமனையில் ஆறுதல் கூறிய பின்னர் சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், "3 பேருக்கு 40 சதவீதத்திற்கு குறைவான காயம் ஏற்பட்டது. 13 பேருக்கு 50 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்க 33 பேர் கொண்ட மருத்துவ குழு செயல்படுகிறது. 74 செவிலியர்கள் சிகிச்சை பிரிவில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்," எனத் தெரிவித்தார். இந்நிலையில், மலையேற்ற பயிற்சிக்கு சென்றவர்களைக் கண்காணிக்க தவறியதாக வனவர் ஜெய்சிங் என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இதனிடேயே, மதுரைக்கு சென்ற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி தீக்காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் அவர்களது உறவினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...