கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மின்தடையே இல்லை என்று மின்வாரிய மண்டல முதன்மை பொறியாளர் கூறியுள்ளார்.
கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மின்தடையே இல்லை என்று மின்வாரிய மண்டல முதன்மை பொறியாளர் கூறியுள்ளார்.

தமிழ்நாடு மின்சார பயன்பாட்டாளர்கள் சங்கம் சார்பில் கலந்தாலோசனை கூட்டம் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கோவை மண்டல முதன்மை பொறியாளர் ஹல்துரை பேசுகையில்," கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மின்தடையே இல்லை.

மாவட்டத்தில் 17 புதிய துணை மின் நிலையங்களை தொடங்கியுள்ளோம். இதன் மூலம் தடையில்லா மின்சாரம் கிடைத்து வருகிறது. மின்சார வசதியே இல்லாத பூமனூர் மற்றும் சேம்புக்கரை என்ற இரண்டு கிராமங்களுக்கு தற்போது மின்சார வசதி கொடுக்கப்பட்டுள்ளது. வரும் 2019-க்குள் மின்சார கசிவினை 13.5 சதவீதம் குறைக்கத் திட்டமிட்டுள்ளோம்.
மின்சார சிக்கனம் என்பதை பொதுமக்கள் அனைவரும் கடைப்பிடித்தால் அதிக அளவில் மின்சாரம் வீணாவதைத் தடுக்க முடியும். " என்றார்.

தமிழ்நாடு மின்சார பயன்பாட்டாளர்கள் சங்கம் சார்பில் கலந்தாலோசனை கூட்டம் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கோவை மண்டல முதன்மை பொறியாளர் ஹல்துரை பேசுகையில்," கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மின்தடையே இல்லை.

மாவட்டத்தில் 17 புதிய துணை மின் நிலையங்களை தொடங்கியுள்ளோம். இதன் மூலம் தடையில்லா மின்சாரம் கிடைத்து வருகிறது. மின்சார வசதியே இல்லாத பூமனூர் மற்றும் சேம்புக்கரை என்ற இரண்டு கிராமங்களுக்கு தற்போது மின்சார வசதி கொடுக்கப்பட்டுள்ளது. வரும் 2019-க்குள் மின்சார கசிவினை 13.5 சதவீதம் குறைக்கத் திட்டமிட்டுள்ளோம்.
மின்சார சிக்கனம் என்பதை பொதுமக்கள் அனைவரும் கடைப்பிடித்தால் அதிக அளவில் மின்சாரம் வீணாவதைத் தடுக்க முடியும். " என்றார்.