குரங்கணி தீ விபத்தில் படுகாயம் அடைந்த சென்னையை சேர்ந்த ஜெயஸ்ரீ என்பவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.
கோவை : குரங்கணி தீ விபத்தில் படுகாயம் அடைந்த சென்னையை சேர்ந்த ஜெயஸ்ரீ என்பவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டு தீயில் சிக்கி மலையேற்ற பயிற்சிக்காக சென்ற 9 பேர் பலியாகினர். இந்த விபத்தில் பலர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மதுரை, தேனி போன்ற மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், தீ விபத்தில் படுகாயமடைந்த சென்னையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ (32), தனியார் மருத்துவமனையின் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக கோவை அழைத்து வரப்பட்டார். தீ காயமடைந்த ஜெயஸ்ரீயுடன் அவரது தாயார், மருத்துவர் உட்பட 4 பேர் உடன் வந்தனர். ஒரு மணி நேரத்திற்கும் குறைவான காலத்தில் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டார்.

கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் சாய்பாபா காலனி அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சையானது அளிக்கப்பட இருக்கிறது. 70 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், தோல் சிகிச்சைகள் வழங்க கோவை தனியார் மருத்துவமனையில் சிறப்பு வசதிகள் இருப்பதால், ஜெயஸ்ரீயின் பெற்றோர் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டு தீயில் சிக்கி மலையேற்ற பயிற்சிக்காக சென்ற 9 பேர் பலியாகினர். இந்த விபத்தில் பலர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மதுரை, தேனி போன்ற மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், தீ விபத்தில் படுகாயமடைந்த சென்னையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ (32), தனியார் மருத்துவமனையின் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக கோவை அழைத்து வரப்பட்டார். தீ காயமடைந்த ஜெயஸ்ரீயுடன் அவரது தாயார், மருத்துவர் உட்பட 4 பேர் உடன் வந்தனர். ஒரு மணி நேரத்திற்கும் குறைவான காலத்தில் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டார்.

கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் சாய்பாபா காலனி அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சையானது அளிக்கப்பட இருக்கிறது. 70 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், தோல் சிகிச்சைகள் வழங்க கோவை தனியார் மருத்துவமனையில் சிறப்பு வசதிகள் இருப்பதால், ஜெயஸ்ரீயின் பெற்றோர் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.