குரங்கணி தீவிபத்தில் படுகாயமடைந்த பெண் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் கோவை வருகை

குரங்கணி தீ விபத்தில் படுகாயம் அடைந்த சென்னையை சேர்ந்த ஜெயஸ்ரீ என்பவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

கோவை : குரங்கணி தீ விபத்தில் படுகாயம் அடைந்த சென்னையை சேர்ந்த ஜெயஸ்ரீ என்பவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.



தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டு தீயில் சிக்கி மலையேற்ற பயிற்சிக்காக சென்ற 9 பேர் பலியாகினர். இந்த விபத்தில் பலர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மதுரை, தேனி போன்ற மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், தீ விபத்தில் படுகாயமடைந்த சென்னையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ (32), தனியார் மருத்துவமனையின் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக கோவை அழைத்து வரப்பட்டார். தீ காயமடைந்த ஜெயஸ்ரீயுடன் அவரது தாயார், மருத்துவர் உட்பட 4 பேர் உடன் வந்தனர். ஒரு மணி நேரத்திற்கும் குறைவான காலத்தில் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டார்.



கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் சாய்பாபா காலனி அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சையானது அளிக்கப்பட இருக்கிறது. 70 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், தோல் சிகிச்சைகள் வழங்க கோவை தனியார் மருத்துவமனையில் சிறப்பு வசதிகள் இருப்பதால், ஜெயஸ்ரீயின் பெற்றோர் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...