ரஜினி பல விஷயங்களில் அப்படித்தான் இருக்கிறார் : கமல் காட்டம்

'காவிரி மேலாண்மை வாரியம் உட்பட பல விஷயங்களில் ரஜினிகாந்த் கருத்து கூறுவதில்லையே?' என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, "இதற்குமட்டுமல்ல, அவர் பல விஷயங்களில் அப்படித்தான் இருக்கிறார்" என்று மக்கள் மய்யத்தின் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.


கோவை : 'காவிரி மேலாண்மை வாரியம் உட்பட பல விஷயங்களில் ரஜினிகாந்த் கருத்து கூறுவதில்லையே?' என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, "இதற்குமட்டுமல்ல, அவர் பல விஷயங்களில் அப்படித்தான் இருக்கிறார்" என்று மக்கள் மய்யத்தின் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமலஹாசன் கூறியதாவது :- 

குரங்கணி தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோர்கள் உணர்ச்சி வசப்பட்டு மருத்துவர்களின் பணிகளுக்கு குறுக்கே நிற்க வேண்டாம். இந்த நிகழ்வை ஒரு கோரமான பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இறந்தவர்கள் பலரும் இளைஞர்கள் என்பதால் எதிர் காலத்தின் ஒரு பகுதி தீக்கரையாகிவிட்டது. வரும் காலத்தில் வனத்திற்குள் செல்வதற்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். அங்கு நேரில் சென்று அரசின் மீட்புப் பணிகளுக்கு இடையூறாக இருக்க விரும்பவில்லை. 

தற்போது தீ விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவை முதலுதவி சிகிச்சை தான்.

இந்த விபத்தில் யாரையும் குறைகூற முடியாது. அரசின் முதலுதவி செயல்பாடுகள் சரியாகத் தான் உள்ளது. மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளோர் சரியாக செயல்பட்டு வருகின்றனர். ஒரு வார காலமாக காட்டுத் தீ எரியும் போது மலையேற்ற பயிற்சிக்கு அழைத்துச் சென்றது சரி அல்ல.

காவிரி 

காவிரி மேலாண்மை வாரியம் நிச்சயம் அமைக்கப்பட வேண்டும். இதை தீர்க்க முடியாத பிரச்சனையாக ஆக்கியிருக்கத் தேவையில்லை. விவசாயிகளுக்கு மட்டுமல்ல தண்ணீர் சேமிப்பை அனைத்து மக்களும் கற்க வேண்டும். பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவது தொடர்பாக வரும் காலத்தில் நிச்சயம் கேரள முதல்வருடன் பேசுவேன். எனது சுற்றுப் பயணத்தின் போது மக்கள் கொடுத்த வரவேற்பைப் பார்த்து நெகிழ்ந்தேன். 

இவ்வாறு அவர் கூறினார்.

ரஜினி 

காவிரி மேலாண்மை வாரியம் உட்பட பல விஷயங்களில் நடிகர் ரஜினிகாந்த் கருத்து கூறுவதில்லையே? என்ற பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு "இதற்குமட்டுமல்லாமல் அவர் பல விஷயங்களில் அப்படித்தான் இருக்கிறார்." என்று கமல் கூறியுள்ளார்.



Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...