சிறையில் மரணமடைந்த கைதியின் உடல் அடக்கம் : சீமான், தனியரசு ஆகியோர் மரியாதை

கோவை சிறையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த கைதி ரிஸ்வானின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

கோவை : கோவை சிறையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த கைதி ரிஸ்வானின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. 

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள்தண்டனைக் கைதியான ரிஸ்வான் உடல்நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார். சிறையில் முறையான சிகிச்சை அளிக்காததால் தான் அவர் உயிரிழந்ததாக உறவினர்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் குற்றம்சாட்டினர். இந்த நிலையில், ரிஸ்வானின் உடல் கோவை அரசு மருத்துவமனையில் இருந்து ஊர்வலமாக மேம்பாலம் வழியாக ப்ரூக்பாண்ட் சாலையைக் கடந்து, ஹைதர் அலி திப்பு சுல்தான் தக்னி சுன்னத் ஜமாத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, உடல் வைக்கப்பட்டு, அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க ஊர்வல கூட்டம் கட்டுப்படுத்தப்பட்டது.



பின்னர், ரிஸ்வானின் உடல் சாய்பாபா காலனியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு மற்றும் இஸ்லாமிய இயக்கங்களைச் சேர்ந்த பலர் மரியாதை செலுத்தினர். பின்னர், மீண்டும் பூமார்க்கெட்டில் உள்ள பள்ளி வாசலுக்கு உடல் கொண்டு வரப்பட்டு, அவருக்கு இஸ்லாமியர் முறைப்படி கடைசி மரியாதை செலுத்தப்பட்டது. இறுதியில், ரிஸ்வானின் உடல் பூமார்கெட் பள்ளிவாசலில் உள்ள மைதானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.



ரிஸ்வானின் இறுதிச் சடங்கையொட்டி, கோவை அரசு மருத்துவமனை, சாயிபாபா காலனி, வடகோவை, பூமார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...