பல்லுயிர் மற்றும் பாதுகாப்பு கருத்தரங்கின் தேசிய பத்திரிக்கை வெளியீடு

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற "பல்லுயிர் மற்றும் அதன் பாதுகாப்பு" கருத்தரங்கு குறித்த தேசிய பத்திரிக்கை வெளியிடப்பட்டது.


கோவை : கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற "பல்லுயிர் மற்றும் அதன் பாதுகாப்பு" கருத்தரங்கு குறித்த தேசிய பத்திரிக்கை வெளியிடப்பட்டது. 

மண்வளம், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிரிகள் மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மையில் அவற்றின் முக்கியத்துவம் பற்றி நடைபெற்று வரும் நிகழ்கால ஆராய்ச்சிகள் மற்றும் அவற்றின் முன்னேற்றங்கள் குறித்து அறிவியல் மாணவர்கள் மற்றும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக "பல்லுயிர் மற்றும் அதன் பாதுகாப்பு" என்ற தலைப்பில் இரண்டு நாள் விரிவுரை கருத்தரங்கம் இன்று தொடங்கியது. உஷா கீர்த்திலால் மேத்தா கலையரங்கில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், தமிழகம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்ச்சியில், பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர் ஆர். சரவண செல்வன், "பல்லுயிர் மற்றும் அதன் பாதுகாப்பு" கருத்தரங்கின் தேசிய பத்திரிக்கையை வெளியிட்டார். அதனை சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் மதிவாணன் பெற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து, பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர் ஆர். சரவண செல்வன் ஃபைட்டோஸ்பெக்ட்ரம் இதழை வெளியிட்டார். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...