நீலகிரி மாவட்டம் உதகையில் ஒருங்கிணைந்த நீர்பிடி முகடுப்பகுதி மேலாண்மை, வாழ்வாதார மேம்பாடு மற்றும் பண்ணை உற்பத்தி குறித்த மூன்று நாட்கள் கருத்தரங்கு இன்று துவங்கியது.
நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகையில் ஒருங்கிணைந்த நீர்பிடி முகடுப்பகுதி மேலாண்மை, வாழ்வாதார மேம்பாடு மற்றும் பண்ணை உற்பத்தி குறித்த மூன்று நாட்கள் கருத்தரங்கு இன்று துவங்கியது.

இந்திய மண் மற்றும் நீர் வள பாதுகாப்பு நிறுவனத்தின் சார்பில் நடத்தப்படும் இப்பயிற்சியை அதன் உதகமண்டல மைய தலைவர் ஓம் பால்சிங் கோலா மற்றும் தோட்டக்கலை துறை மற்றும் மலை பயிர்கள் இணை இயக்குனர் உமா ராணி துவக்கி வைத்தனர். பின்னர், நிகழ்ச்சியில் உமா ராணி பேசுகையில், "இந்நிறுவனம் மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு குறித்த தொழில்நுட்பங்களை உருவாக்கி அவற்றை விவசாயிகளுக்குப் பயிற்சி அளிப்பதில் முன்னோடியாகத் திகழ்கிறது. எனவே, இப்பயிற்சில் கற்றுக்கொண்ட தொழில்நுட்பங்களை விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களில் செயல்படுத்தி, மற்ற விவசாயிகளுக்கும் எடுத்துரைக்க வேண்டும்," எனக் கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து மைய தலைவர் ஓம் பால்சிங் கோலா கூறியதாவது :- அரசு விவசாயிகளின் முன்னேற்றத்திற்காகப் பல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அவற்றை விவசாயிகள் ஈடுபாட்டுடன் செயல்படுத்த முன்வர வேண்டும். இவ்வாறு கூறினார். தொடர்ந்து, இந்நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து பேசிய முதன்மை விஞ்ஞானி மணிவண்ணன், ஒருங்கிணைந்த நீர்பிடி முகடுப்பகுதி மேலாண்மையில் விவசாயிகளின் பங்கேற்பின் முக்கியத்துவத்துவம் குறித்தும், மழைநீர் சேகரிப்பு மற்றும் விவசாய உற்பத்தி பொருட்களின் மதிப்புக்கூட்டுதலின் அவசியம் குறித்து விளக்கினார்.
இப்பயிற்சியில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்தைச் சேர்ந்த 25 நீர்ப்பிரி பயனாளிகள் கலந்துகொண்டனர். இறுதியில், இந்நிகழ்ச்சியில் நீர்பிடி முகடுப்பகுதி மேலாண்மை குறித்த கையேடு வெளியிடப்பட்டது.

இந்திய மண் மற்றும் நீர் வள பாதுகாப்பு நிறுவனத்தின் சார்பில் நடத்தப்படும் இப்பயிற்சியை அதன் உதகமண்டல மைய தலைவர் ஓம் பால்சிங் கோலா மற்றும் தோட்டக்கலை துறை மற்றும் மலை பயிர்கள் இணை இயக்குனர் உமா ராணி துவக்கி வைத்தனர். பின்னர், நிகழ்ச்சியில் உமா ராணி பேசுகையில், "இந்நிறுவனம் மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு குறித்த தொழில்நுட்பங்களை உருவாக்கி அவற்றை விவசாயிகளுக்குப் பயிற்சி அளிப்பதில் முன்னோடியாகத் திகழ்கிறது. எனவே, இப்பயிற்சில் கற்றுக்கொண்ட தொழில்நுட்பங்களை விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களில் செயல்படுத்தி, மற்ற விவசாயிகளுக்கும் எடுத்துரைக்க வேண்டும்," எனக் கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து மைய தலைவர் ஓம் பால்சிங் கோலா கூறியதாவது :- அரசு விவசாயிகளின் முன்னேற்றத்திற்காகப் பல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அவற்றை விவசாயிகள் ஈடுபாட்டுடன் செயல்படுத்த முன்வர வேண்டும். இவ்வாறு கூறினார். தொடர்ந்து, இந்நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து பேசிய முதன்மை விஞ்ஞானி மணிவண்ணன், ஒருங்கிணைந்த நீர்பிடி முகடுப்பகுதி மேலாண்மையில் விவசாயிகளின் பங்கேற்பின் முக்கியத்துவத்துவம் குறித்தும், மழைநீர் சேகரிப்பு மற்றும் விவசாய உற்பத்தி பொருட்களின் மதிப்புக்கூட்டுதலின் அவசியம் குறித்து விளக்கினார்.
இப்பயிற்சியில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்தைச் சேர்ந்த 25 நீர்ப்பிரி பயனாளிகள் கலந்துகொண்டனர். இறுதியில், இந்நிகழ்ச்சியில் நீர்பிடி முகடுப்பகுதி மேலாண்மை குறித்த கையேடு வெளியிடப்பட்டது.