நீர்பிடி முகடுப்பகுதி மேலாண்மை குறித்த 3 நாள் கருத்தரங்கு தொடக்கம்

நீலகிரி மாவட்டம் உதகையில் ஒருங்கிணைந்த நீர்பிடி முகடுப்பகுதி மேலாண்மை, வாழ்வாதார மேம்பாடு மற்றும் பண்ணை உற்பத்தி குறித்த மூன்று நாட்கள் கருத்தரங்கு இன்று துவங்கியது.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகையில் ஒருங்கிணைந்த நீர்பிடி முகடுப்பகுதி மேலாண்மை, வாழ்வாதார மேம்பாடு மற்றும் பண்ணை உற்பத்தி குறித்த மூன்று நாட்கள் கருத்தரங்கு இன்று துவங்கியது.



இந்திய மண் மற்றும் நீர் வள பாதுகாப்பு நிறுவனத்தின் சார்பில் நடத்தப்படும் இப்பயிற்சியை அதன் உதகமண்டல மைய தலைவர் ஓம் பால்சிங் கோலா மற்றும் தோட்டக்கலை துறை மற்றும் மலை பயிர்கள் இணை இயக்குனர் உமா ராணி துவக்கி வைத்தனர். பின்னர், நிகழ்ச்சியில் உமா ராணி பேசுகையில், "இந்நிறுவனம் மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு குறித்த தொழில்நுட்பங்களை உருவாக்கி அவற்றை விவசாயிகளுக்குப் பயிற்சி அளிப்பதில் முன்னோடியாகத் திகழ்கிறது. எனவே, இப்பயிற்சில் கற்றுக்கொண்ட தொழில்நுட்பங்களை விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களில் செயல்படுத்தி, மற்ற விவசாயிகளுக்கும் எடுத்துரைக்க வேண்டும்," எனக் கேட்டுக்கொண்டார்.



இதனைத் தொடர்ந்து மைய தலைவர் ஓம் பால்சிங் கோலா கூறியதாவது :- அரசு விவசாயிகளின் முன்னேற்றத்திற்காகப் பல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அவற்றை விவசாயிகள் ஈடுபாட்டுடன் செயல்படுத்த முன்வர வேண்டும். இவ்வாறு கூறினார். தொடர்ந்து, இந்நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து பேசிய முதன்மை விஞ்ஞானி மணிவண்ணன், ஒருங்கிணைந்த நீர்பிடி முகடுப்பகுதி மேலாண்மையில் விவசாயிகளின் பங்கேற்பின் முக்கியத்துவத்துவம் குறித்தும், மழைநீர் சேகரிப்பு மற்றும் விவசாய உற்பத்தி பொருட்களின் மதிப்புக்கூட்டுதலின் அவசியம் குறித்து விளக்கினார்.

இப்பயிற்சியில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்தைச் சேர்ந்த 25 நீர்ப்பிரி பயனாளிகள் கலந்துகொண்டனர். இறுதியில், இந்நிகழ்ச்சியில் நீர்பிடி முகடுப்பகுதி மேலாண்மை குறித்த கையேடு வெளியிடப்பட்டது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...