உதகையில் தொடங்கியது சீசன் : அதிகரிக்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு உதகை அரசு தாவரவியல் பூங்காவிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு உதகை அரசு தாவரவியல் பூங்காவிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள உலக புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்கா அனைவரையும் கவர்ந்து வருகிறது. குறிப்பாக, இயற்கை சூழ்ந்த இடமாகவும், அரிய வகை மரங்கள் மற்றும் பல்வேறு வண்ண மலர்கள் என இங்கு வரும் சுற்றுலா பயணிகளை இப்பூங்கா கவர்ந்துள்ளது.

மேலும், தாவரவியல் பயிலும் மாணவர்கள் இங்குள்ள தாவரங்களை ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இதனால், அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகை புரிகின்றனர். இந்நிலையில் உதகை அரசு தாவரவியல் பூங்காவிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை, கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு அதிகரித்துள்ளது. குறிப்பாக, 2016 முதல் 2017-ம் ஆண்டு வரை 8,983 பேர் வருகை புரிந்துள்ளனர். இந்தாண்டு 2017-2018ஆம் ஆண்டில் நேற்று வரை 10,413 பேர் பூங்காவிற்கு வருகை புரிந்துள்ளனர்.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை குறித்து பூங்கா நுழைவு வாயில் பகுதியில் வருகை பதிவேடு மூலம் அவர்கள் பெயர், எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என பூங்கா ஊழியர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...