நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு உதகை அரசு தாவரவியல் பூங்காவிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு உதகை அரசு தாவரவியல் பூங்காவிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள உலக புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்கா அனைவரையும் கவர்ந்து வருகிறது. குறிப்பாக, இயற்கை சூழ்ந்த இடமாகவும், அரிய வகை மரங்கள் மற்றும் பல்வேறு வண்ண மலர்கள் என இங்கு வரும் சுற்றுலா பயணிகளை இப்பூங்கா கவர்ந்துள்ளது.
மேலும், தாவரவியல் பயிலும் மாணவர்கள் இங்குள்ள தாவரங்களை ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இதனால், அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகை புரிகின்றனர். இந்நிலையில் உதகை அரசு தாவரவியல் பூங்காவிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை, கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு அதிகரித்துள்ளது. குறிப்பாக, 2016 முதல் 2017-ம் ஆண்டு வரை 8,983 பேர் வருகை புரிந்துள்ளனர். இந்தாண்டு 2017-2018ஆம் ஆண்டில் நேற்று வரை 10,413 பேர் பூங்காவிற்கு வருகை புரிந்துள்ளனர்.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை குறித்து பூங்கா நுழைவு வாயில் பகுதியில் வருகை பதிவேடு மூலம் அவர்கள் பெயர், எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என பூங்கா ஊழியர்கள் பதிவு செய்து வருகின்றனர்.
மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள உலக புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்கா அனைவரையும் கவர்ந்து வருகிறது. குறிப்பாக, இயற்கை சூழ்ந்த இடமாகவும், அரிய வகை மரங்கள் மற்றும் பல்வேறு வண்ண மலர்கள் என இங்கு வரும் சுற்றுலா பயணிகளை இப்பூங்கா கவர்ந்துள்ளது.
மேலும், தாவரவியல் பயிலும் மாணவர்கள் இங்குள்ள தாவரங்களை ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இதனால், அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகை புரிகின்றனர். இந்நிலையில் உதகை அரசு தாவரவியல் பூங்காவிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை, கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு அதிகரித்துள்ளது. குறிப்பாக, 2016 முதல் 2017-ம் ஆண்டு வரை 8,983 பேர் வருகை புரிந்துள்ளனர். இந்தாண்டு 2017-2018ஆம் ஆண்டில் நேற்று வரை 10,413 பேர் பூங்காவிற்கு வருகை புரிந்துள்ளனர்.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை குறித்து பூங்கா நுழைவு வாயில் பகுதியில் வருகை பதிவேடு மூலம் அவர்கள் பெயர், எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என பூங்கா ஊழியர்கள் பதிவு செய்து வருகின்றனர்.