திருப்பூரில் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் திறப்பு

திருப்பூர் மாவட்டம் கருவம்பாளையம் பகுதியில் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் திறக்கப்பட்டது.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் கருவம்பாளையம் பகுதியில் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் திறக்கப்பட்டது. 

இந்த விழாவிற்கு மாநில நுகர்வோர் நீதிமன்ற தலைவர் எஸ்.தமிழ்வாணன் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார். இதில், மாவட்ட காவல் ஆணையர் பி. நாகராஜன், கோவை மாவட்ட நீதிமன்ற தலைவர் பாலசந்திரன், திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி உட்பட ஏராளமான வழக்கறிஞர்கள், காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



தொடர்ந்து செய்தியாளர்களிடம் மாநில நுகர்வோர் நீதிமன்ற தலைவர் எஸ். தமிழ்வாணன் கூறுகையில், " தமிழகத்தில் 32 மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்கள் திறக்கப்பட்டுள்ளன. நுகர்வோர் ஒரு பொருளை வாங்கும் போது உள்ள குறைபாடு, அதன் தரம், எம்.ஆர்.பி.ரேட், காலாவதி தேதி உள்ளிட்ட பாதிப்புகள் உள்ளன. சமையல் எரிவாயு, எலக்டிரிசிட்டி, ஏற்றுமதி உள்ளிட்ட அனைத்தும் உள்ளடங்கும். இழப்பீடு 1986-ம் ஆண்டு சட்டத்தின்படி மாவட்ட நீதிமன்றத்திற்கு அதிகபட்சம் ரூ. 20 லட்சம் வரையிலும், அதற்கு மேல் ரூ. 1 கோடி வரை மாநில நீதிமன்றத்திற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நுகர்வோர் நீதிமன்றங்கள் இருப்பது நியாயங்கள், நீதி வழங்குவதற்காகத் தான் செயல்படுகின்றது." எனத் தெரிவித்தார்.



Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...