கண்டெய்னர் லாரி - ஆம்புலன்ஸ் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலி

கோவை எல் அன்டி பைப்பாஸ் சாலையில் வேகமாக வந்த கண்டெய்னர் லாரி, ஆம்புலன்ஸ் மீது மோதியதில் 3 பேர் பலியாகினர்.

கோவை: கோவை எல் அன்டி பைப்பாஸ் சாலையில் வேகமாக வந்த கண்டெய்னர் லாரி, ஆம்புலன்ஸ் மீது மோதியதில் 3 பேர் பலியாகினர்.

சூலூர் அருகே உள்ள சிந்தாமணிப்புதூர் பகுதியில் கும்பகோணம் மாவட்டத்தைச் சேர்ந்த ராமைய்யன் மகன் பசுபதி (35) என்பவர் வசித்து வருகிறார். இவர், சிங்காநல்லூர் பகுதியிலுள்ள தனியார் எலும்பு முறிவு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவர், எல் அன்டி பைபாஸ் சாலையின் அவினாசி சாலை சந்திப்பு பகுதியில் தனது வாகனத்தை நிறுத்துவது வழக்கம். நேற்று இரவு வழக்கம்போல, இவர் அப்பகுதியில் பணியில் இருந்துள்ளார். இவருக்கு துணையாக அவரது நண்பர் ராஜேஷ் என்பவரும் உடன் இருந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை பணி முடிந்து சிந்தாமணிப்புதூரில் உள்ள தனது வீட்டிற்கு கிளம்பியுள்ளார். அப்போது, எல் அன்டி சுங்கச்சாவடியில் சுங்கம் வசூலிக்கும் பணியில் இருந்த சக்திவேல் என்பவரும் பணி முடிந்து ஆம்புலன்சில் லிப்ட் கேட்டு வந்துள்ளார். இவர்கள் வந்த வாகனம் பைபாஸ் சாலையில் அத்தப்பகவுண்டன் புதூர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென எதிரே வந்த கண்டெய்னர் லாரி ஆம்புலன்ஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில், பசுபதி மற்றும் ராஜேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த சக்திவேல் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பலியானார்.

கோவையின் பிரதான சாலையில் ஏற்பட்ட இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...