விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய பட்டு வளர்ச்சித்துறை

நீலகிரி மாவட்டம் குன்னூரில் தமிழ்நாடு அரசு பட்டு வளர்ச்சி துறையின் சார்பாக பட்டு விவசாயிகளுக்கு இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் தமிழ்நாடு அரசு பட்டு வளர்ச்சி துறையின் சார்பாக பட்டு விவசாயிகளுக்கு இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மாநில திட்டத்தின் கீழ் 2017 - 2018-ம் ஆண்டுக்கான நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வழங்கப்பட்டது. அதன்படி, மாவட்டத்தில் பட்டு வளர்க்கும் 7 விவசாயிகளுக்கு மானியமாக ரூ.4,83,875 காசோலையை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார். 

மேலும், பட்டு வளர்ப்பு தொழிலில் பிற்பட்டடுத்தப்பட்ட பிரிவின் கீழ் ஒரு விவசாயிக்கு ரூ.52,500 மதிப்பிலான விவசாய உபகரணங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் போது, குன்னூர் பட்டு வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் டி.பாலசுப்ரமணியன், தொழில்நுட்ப உதவியாளர் ரவிசங்கர் உள்ளிட்ட பல அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...