குடிநீர் தேக்க தொட்டியை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவரக் கோரி மனு

நீலகிரியில் புதியதாக அமைக்கப்பட்ட கிணறு மற்றும் குடிநீர் தேக்க தொட்டியை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நீலகிரி: நீலகிரியில்  புதியதாக அமைக்கப்பட்ட கிணறு மற்றும் குடிநீர் தேக்க தொட்டியை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கக்  கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



உதகையை அடுத்த கெந்தளா கிராமத்தில் சுமார் 120 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் ஏற்ப்பட்ட குடிநீர் பிரச்சனை  காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு ரூ. 16 லட்சம் மதிப்பீட்டில் மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய கிணறு, குடிநீர் தேக்கத் தொட்டி, பம்பு அறை மற்றும் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. 

பணிகள் நிறைவடைந்து ஓராண்டு காலமாகியும் குடிநீர் விநியோகம் இதுவரை செய்யப்படவில்லை. இது குறித்து பலமுறை அதிகரட்டி பேரூராட்சியில் மனு அளித்தும், பணி முடிந்ததற்கான அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை எனக்  கூறி பேரூராட்சி நிர்வாகம் காலம் தாழ்த்தி வருகிறது. எனவே, உடனடியாக இது தொடர்பாக  உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் விநியோகம் செய்ய ஆணையை பிறப்பிக்குமாறு கூறி இன்று அக்கிராம மக்கள் 100-க்கும் மேற்ப்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...