கெயில் எரிவாயு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாய சங்கத்தினர் மாதிரி குழாயுடன் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: கெயில் எரிவாயு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாய சங்கத்தினர் மாதிரி குழாயுடன் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கெயில் எரிவாயு திட்டத்தை கேரள மாநிலம் கொச்சியிலிருந்து கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் வழியாகக் கொண்டு செல்ல மத்திய அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதனால் தமிழகத்தில் விவசாயம் பாதிக்கப்படும் என்று கூறி விவசாயிகள் மற்றும் பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தி இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இந்த நிலையில், விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்ததை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட குழு உறுப்பினர்கள் கெயில் திட்டத்தின் மாதிரி குழாயுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.

இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் பழனிச்சாமி கூறுகையில், "தமிழகத்தில் கெயில் எரிவாயு திட்டம் நிறைவேற்றப்பட்டால் பயிர்கள் சாகுபடி முற்றிலும் பாதிக்கப்படும். கோவை மக்களின் நீர் ஆதாரம் பாதிக்கப்படும். விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நெடுஞ்சாலை துறை வழியாக கெயில் குழாய்களை கொண்டு செல்லாம். மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் இந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்." என்றார்.
மாவட்ட ஆட்சியரிடம் கெயில் திட்டத்தின் மாதிரி குழாயுடன் விவசாயிகள் மனு அளிக்க வந்ததால் அவ்வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கெயில் எரிவாயு திட்டத்தை கேரள மாநிலம் கொச்சியிலிருந்து கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் வழியாகக் கொண்டு செல்ல மத்திய அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதனால் தமிழகத்தில் விவசாயம் பாதிக்கப்படும் என்று கூறி விவசாயிகள் மற்றும் பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தி இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இந்த நிலையில், விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்ததை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட குழு உறுப்பினர்கள் கெயில் திட்டத்தின் மாதிரி குழாயுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.

இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் பழனிச்சாமி கூறுகையில், "தமிழகத்தில் கெயில் எரிவாயு திட்டம் நிறைவேற்றப்பட்டால் பயிர்கள் சாகுபடி முற்றிலும் பாதிக்கப்படும். கோவை மக்களின் நீர் ஆதாரம் பாதிக்கப்படும். விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நெடுஞ்சாலை துறை வழியாக கெயில் குழாய்களை கொண்டு செல்லாம். மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் இந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்." என்றார்.
மாவட்ட ஆட்சியரிடம் கெயில் திட்டத்தின் மாதிரி குழாயுடன் விவசாயிகள் மனு அளிக்க வந்ததால் அவ்வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.