தேனி தீ விபத்து: அரசியல் கட்சியினர் இரங்கல்

தேனி மாவட்டம் குரங்கனியில் ஏற்பட்ட தீ விபத்தில் டிரெக்கிங் செய்த முப்பதுக்கும் மேற்பட்டோர் சிக்கினர். இதில் 9 பேர் பலியாகினர். தற்போது மீட்புப் பணி நடைபெற்று வரும் நிலையில், உயிரிழந்தவர்கள் மற்றும் தீக்காயமடைந்தவர்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தேனி: தேனி மாவட்டம் குரங்கனியில் ஏற்பட்ட தீ விபத்தில் டிரெக்கிங் செய்த முப்பதுக்கும் மேற்பட்டோர் சிக்கினர். இதில் 9 பேர் பலியாகினர். தற்போது மீட்புப் பணி நடைபெற்று வரும் நிலையில், உயிரிழந்தவர்கள் மற்றும் தீக்காயமடைந்தவர்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான விவரங்கள் பின்வருமாறு:- 

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு: குரங்கணி தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கவிஞர் வைரமுத்து: உயிர் வலிக்கிறது; ஊரே அழுகிறது. காட்டுத்தீயில் கருகிய தங்கங்கள் மீது கண்ணீர் சொரிகிறேன். காயப்பட்டவர்கள் பிழைக்க வேண்டுமே என்று பேராசை கொள்கிறேன். பெற்றோர் நிலையில் நின்று பெருவலி உணர்கிறேன்.

“சாவே உனக்கொரு நாள் சாவு வந்து சேராதோ; தீயே உனக்கொரு நாள் தீ மூட்டிப் பாரோமோ” என்ற கண்ணதாசன் வரிகளைக் கடன் வாங்கிக் கலங்குகிறேன். இந்த விபத்தில் இயற்கையின் பங்கு எவ்வளவு, மனிதப் பங்கு எவ்வளவு என்பது ஆய்வுக்குரியது. மரணத்திலிருந்து பாடம் படிப்போம்; புதிய இழப்புகள் நேராமல் காப்போம்.



கமலஹாசன்: குரங்கணி விபத்து மனதைப் பிழியும் சோகம். பிழைத்தவர் நலம் பெற வேண்டும். மீட்புப் பணியில் ஈடுபடுவோர் அனைவருக்கும் என் வணக்கங்கள்.



மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்: காட்டுத்தீயில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அறிகிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்திட எல்லாம்வல்ல அன்னை சக்தியை பிரார்த்திக்கின்றேன். 



விஜயகாந்த்: போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் மலையேறும் பயிற்சி மேற்கொண்டபோது 40-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவிகள் தீயில் சிக்கி விபத்து ஏற்பட்ட செய்தி கேட்டு மிகவும் மன வேதனையடைந்தேன். மத்திய,மாநில அரசுகள் உடனடியாக போர்க்கால அடிப்படையில் மாணவிகளை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.



Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...