தேனி மாவட்டம் குரங்கனியில் ஏற்பட்ட தீ விபத்தில் டிரெக்கிங் செய்த முப்பதுக்கும் மேற்பட்டோர் சிக்கினர். இதில் 9 பேர் பலியாகினர். தற்போது மீட்புப் பணி நடைபெற்று வரும் நிலையில், உயிரிழந்தவர்கள் மற்றும் தீக்காயமடைந்தவர்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தேனி: தேனி மாவட்டம் குரங்கனியில் ஏற்பட்ட தீ விபத்தில் டிரெக்கிங் செய்த முப்பதுக்கும் மேற்பட்டோர் சிக்கினர். இதில் 9 பேர் பலியாகினர். தற்போது மீட்புப் பணி நடைபெற்று வரும் நிலையில், உயிரிழந்தவர்கள் மற்றும் தீக்காயமடைந்தவர்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான விவரங்கள் பின்வருமாறு:-
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு: குரங்கணி தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கவிஞர் வைரமுத்து: உயிர் வலிக்கிறது; ஊரே அழுகிறது. காட்டுத்தீயில் கருகிய தங்கங்கள் மீது கண்ணீர் சொரிகிறேன். காயப்பட்டவர்கள் பிழைக்க வேண்டுமே என்று பேராசை கொள்கிறேன். பெற்றோர் நிலையில் நின்று பெருவலி உணர்கிறேன்.
“சாவே உனக்கொரு நாள் சாவு வந்து சேராதோ; தீயே உனக்கொரு நாள் தீ மூட்டிப் பாரோமோ” என்ற கண்ணதாசன் வரிகளைக் கடன் வாங்கிக் கலங்குகிறேன். இந்த விபத்தில் இயற்கையின் பங்கு எவ்வளவு, மனிதப் பங்கு எவ்வளவு என்பது ஆய்வுக்குரியது. மரணத்திலிருந்து பாடம் படிப்போம்; புதிய இழப்புகள் நேராமல் காப்போம்.

கமலஹாசன்: குரங்கணி விபத்து மனதைப் பிழியும் சோகம். பிழைத்தவர் நலம் பெற வேண்டும். மீட்புப் பணியில் ஈடுபடுவோர் அனைவருக்கும் என் வணக்கங்கள்.

மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்: காட்டுத்தீயில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அறிகிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்திட எல்லாம்வல்ல அன்னை சக்தியை பிரார்த்திக்கின்றேன்.

விஜயகாந்த்: போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் மலையேறும் பயிற்சி மேற்கொண்டபோது 40-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவிகள் தீயில் சிக்கி விபத்து ஏற்பட்ட செய்தி கேட்டு மிகவும் மன வேதனையடைந்தேன். மத்திய,மாநில அரசுகள் உடனடியாக போர்க்கால அடிப்படையில் மாணவிகளை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது தொடர்பான விவரங்கள் பின்வருமாறு:-
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு: குரங்கணி தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கவிஞர் வைரமுத்து: உயிர் வலிக்கிறது; ஊரே அழுகிறது. காட்டுத்தீயில் கருகிய தங்கங்கள் மீது கண்ணீர் சொரிகிறேன். காயப்பட்டவர்கள் பிழைக்க வேண்டுமே என்று பேராசை கொள்கிறேன். பெற்றோர் நிலையில் நின்று பெருவலி உணர்கிறேன்.
“சாவே உனக்கொரு நாள் சாவு வந்து சேராதோ; தீயே உனக்கொரு நாள் தீ மூட்டிப் பாரோமோ” என்ற கண்ணதாசன் வரிகளைக் கடன் வாங்கிக் கலங்குகிறேன். இந்த விபத்தில் இயற்கையின் பங்கு எவ்வளவு, மனிதப் பங்கு எவ்வளவு என்பது ஆய்வுக்குரியது. மரணத்திலிருந்து பாடம் படிப்போம்; புதிய இழப்புகள் நேராமல் காப்போம்.

கமலஹாசன்: குரங்கணி விபத்து மனதைப் பிழியும் சோகம். பிழைத்தவர் நலம் பெற வேண்டும். மீட்புப் பணியில் ஈடுபடுவோர் அனைவருக்கும் என் வணக்கங்கள்.

மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்: காட்டுத்தீயில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அறிகிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்திட எல்லாம்வல்ல அன்னை சக்தியை பிரார்த்திக்கின்றேன்.

விஜயகாந்த்: போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் மலையேறும் பயிற்சி மேற்கொண்டபோது 40-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவிகள் தீயில் சிக்கி விபத்து ஏற்பட்ட செய்தி கேட்டு மிகவும் மன வேதனையடைந்தேன். மத்திய,மாநில அரசுகள் உடனடியாக போர்க்கால அடிப்படையில் மாணவிகளை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
