தேனியில் காட்டுத்தீயில் சிக்கிய கல்லூரி மாணவிகள் : சூலூரில் இருந்து விரைந்தது ஹெலிகாப்டர்



தேனி: தேனி மாவட்ட வனப்பகுதிக்குள் டிரக்கிங் சென்ற கல்லூரி மாணவிகள் காட்டுத் தீயில் சிக்கி போராடி வருகின்றனர். 

மகளிர் தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணிக்கு திருப்பூர் மற்றும் ஈரோட்டை சேர்ந்த கல்லூரி மாணவிகள் 40 பேர் டிரக்கிங் சென்றனர். 

இந்த நிலையில், வனப்பகுதிக்குள் இன்று திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது  இந்த தீ மளமளவென வனம் முழுவதும் பரவியது. 

இதனால், டிரெக்கிங் சென்ற மாணவிகள் காட்டுத் தீயில் சிக்கி போராடினர். 

இது தொடர்பாக, மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது  தகவலின் பேரில் தீயணைப்பு வாகனம் மற்றும் வனப் பாதுகாவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 

கடுமையான போராட்டத்திற்கு பிறகு 12 பேரை தீயணைப்பு படையினர் மீட்டனர். 

இந்த தகவலறிந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதா ராமன், கோவை மாவட்டம் சூலூர் விமான படைதளத்தில் இருந்து இரண்டு ஹெலிகாப்டர்களை மீட்பு பணிக்கு அனுப்ப உத்தரவிட்டார். 

அதன்பேரில், சூலூரில் இருந்து 2 ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணிக்காக சென்றது. அதில் 20 பேர் கொண்ட மீட்புக் குழுவினர் உள்ளனர். மேலும், தண்ணீர் டேங்குகள், கயிறு, மருத்துவ உபகரணங்கள் மற்றும் தீயில் இறங்கி மீட்புப் பணியை மேற்கொள்ளத்தக்க உடைகள் ஆகியவை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...