கோவை மற்றும் நீலகிரியில் இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் தொடக்கம்

கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தொடங்கியது.


கோவை : கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தொடங்கியது.

தேசிய போலியோ ஒழிப்பு திட்டத்தின் கீழ் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இரண்டாம் கட்டமாக போலியோ சொட்டு மருந்து இன்று வழங்கப்பட்டுவருகிறது. போலியோ நோயை முற்றிலுமாக ஒழிப்பதற்காக தேசிய போலியோ நோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் இரண்டு கட்டங்களாக போலியோ சொட்டு மருந்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.



கோவையில் புரூக்பாண்ட் சாலையில் உள்ள சீத்தலட்சுமி மகப்பேறு மையத்தில் நடந்த இம்முகாமில் கோவை மாநகராட்சி ஆணையர் விஜய கார்த்திகேயன் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தினை வழங்கினார். கோவையில் 33 மாநகராட்சி நகர் நல மையங்கள், 129 சத்துணவு கூடங்கள், 45 பள்ளிகள், ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையம் போன்ற பல்வேறு இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றுவருகிறது.

இப்பணியில் சுகாதார பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், செவிலியர் மாணவிகள் மற்றும் தனியார் தொண்டு நிறுவன பணியாளர்கள் என 1404 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 1,61,787 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. 49 மருத்துவ அலுவலர்கள் இப்பணியை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதே போல், உதகை அரசு தாவரவியல் பூங்கா நுழைவு வாயிலில் நடைபெற்ற இந்த முகாமை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.

நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கருத்தில் கொண்டு மாவட்டம் முழுவதும் 30 முக்கிய சுற்றுலா தலங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மொபைல் வாகனங்கள், பேருந்து நிலையம், இரயில் நிலையம், மார்க்கெட் சோதனை சாவடிகள், 29 கோயில்கள், 52 கிறிஸ்துவ ஆலயங்கள் மற்றும் 6  மசூதிகளில் சொட்டு மருந்து மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், "சொட்டு மருந்து முகாமிற்காக 770 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 28-ம் தேதி நடைபெற்ற முதல் கட்ட முகாமில் மாவட்டம் முழுவதும் 45,096 குழந்தைகள் பயனடைந்துள்ளனர்." என்றார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...