கோவையில் நடைபெற்ற ஒயிலாட்ட அரங்கேற்ற விழா : பார்த்து ரசித்த பொதுமக்கள்

கோவையில் நடைபெற்ற ஒயிலாட்ட அரங்கேற்ற விழாவை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.


கோவை : கோவையில் நடைபெற்ற ஒயிலாட்ட அரங்கேற்ற விழாவை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.



சங்கமம் ஒயிலாட்ட குழு கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறது. இந்த குழுவினரின் ஒயிலாட்ட அரங்கேற்ற விழா கணியூரை அடுத்த கொள்ளுபாளையம் மணியகாரர் தோட்டத்தில் நேற்று நடைபெற்றது. 

இவ்விழாவை காங்கேயம் மாடுகள் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி தொடங்கி வைத்தார். 



தொடர்ந்து அவர் மக்களிடம் பேசுகையில், "மறந்து போன கலையை வளர்க்கும் முயற்சியில் ஈடுபடும் கலை குழுவினருக்கு வாழ்த்துக்கள். மூன்று தலைமுறையினர் பங்கேற்கும் இவ்விழா சிறப்பாக நடைபெற வேண்டும்." என்றார்.

குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என பல்வேறு வயதுடையோர் மேள இசைக்கு ஏற்றபடி ஆடிய ஒயிலாட்ட நிகழ்ச்சி பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.



இது குறித்து சுசித்தரா என்ற மாணவி கூறுகையில், " முதலில் இந்த ஒயிலாட்ட நிகழ்ச்சியைக் காண சென்றேன். அதன்பிறகு இந்த கலையால் ஈர்க்கப்பட்டு குழுவில் இணைந்து கடந்த 8 மாதங்களாக பயிற்சி பெற்று வந்தேன். தற்போது ஒயிலாட்டத்தை முறைப்படி கற்று அரங்கேற்றம் செய்துள்ளேன்." என்றார்.

இந்த ஒயிலாட்ட நிகழ்ச்சியில் 50 பேரின் அரங்கேற்றம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...