இன்னும் நமக்கு ஆட்கள் தேவை : கமல் பேச்சு

செய்ய வேண்டிய வேலை அதிகமாக உள்ளது என்றும் அதற்கு இன்னும் ஆட்கள் தேவை என்று மக்கள் நீதி மய்யம் கட்சி நிறுவனர் கமலஹாசன் பேசியுள்ளார்.


கோவை : செய்ய வேண்டிய வேலை அதிகமாக உள்ளது என்றும் அதற்கு இன்னும் ஆட்கள் தேவை என்று மக்கள் நீதி மய்யம் கட்சி நிறுவனர் கமலஹாசன் பேசியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி நிறுவனர் கமலஹாசன் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்தார் விமானம் மூலம் கோவை வந்தார். கோவையில் இருந்து சாலை மார்க்கமாக ஈரோடு புறப்பட்டார். அப்போது, அவினாசி புதிய பேருந்து நிலையம் அருகில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கமலுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். 

அப்போது அவர் பேசுகையில், "எந்த தைரியத்தில் அரசியலுக்கு வந்தீர்கள்? என்று கேட்டார்கள். உங்களை நம்பித்தான் அரசியலுக்கு வந்திருக்கிறேன். நல்ல தமிழகம் அமைய வேண்டுமென்றால் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பணியாற்ற வேண்டும்." என்றார். 



தொடர்ந்து ஈரோட்டில் தனியார் மண்டபத்தில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய அவர், " நாம் செய்ய வேண்டிய வேலை அதிகமாக உள்ளது. இன்னும் நமக்கு ஆட்கள் தேவை. கட்டுப்பாடு நம் கட்சிக்கு அவசியம். அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டும். கட்சிக்கு புதிதாக வந்தவர்களுக்கு இந்த கட்டுப்பாடுகளை சொல்லிக் கொடுங்கள். நாம் எல்லோரும் இணைந்தால் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமையும். உங்கள் ஊர் குளம் சுத்தமாகும் அதற்காக உங்களுக்கு கை கொடுக்க வந்திருக்கிறது மக்கள் நீதி மையம். நான் வாக்குறுதி கொடுக்க முடியாது. உங்கள் பிரச்சினை குறித்து கலந்து ஆலோசிக்க அறிஞர் குழு இங்கே வரும். அவர்கள் மூலம் உங்கள் எண்ணங்களைப் புரிந்து கொள்வேன்." என்றார்.

நிகழ்ச்சியில், தொண்டரின் பெண் குழந்தைக்கு கமலரஞ்சிதம் என்று பெயர் சூட்டினார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...