துப்பாக்கி முனையில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் கொள்ளை முயற்சி

கோவை துடியலூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபரிடம் போலீஸ் என்று கூறி துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : கோவை துடியலூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபரிடம் போலீஸ் என்று கூறி துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய மர்ம நபர்கள்  பணத்தை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜி.என்.மில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஹர்பிர்த் சிங் (60). ரியல் எஸ்டேட் தோழில் செய்து வரும் அவரது வீட்டுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒருவர் போலிசார் போல வந்தார். மேலும், தொழிலில் பாதுகாப்பு தருவதாக கூறினார். இதை ஹர்பிர்த் சிங் மறுத்துள்ளார். இந்த நிலையில், ஹர்பிர்த் சிங் நேற்று தனது காரில் மேட்டுப்பாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது போலீஸ் என்று கூறிய அவரை வழிமறித்த மூன்று பேர் பாதுகாப்பு காரணங்களை சொல்லி அவரது காரில் ஏறினர்.

கார் சிறிது தூரம் சென்றதும், அந்த நபர் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டினார். இதனால் அதிர்ச்சியடைந்த ஹர்பிர்த் சிங் கூச்சலிட்டார். 

இதனால் பயந்து போன மர்ம நபர்கள் துப்பாக்கியை காருக்குள்ளேயே விட்டு விட்டு தப்பி ஓடினர். இந்த சம்பவம் குறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் ஹர்பிர்த் சிங் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர். அத்துடன் காருக்குள் விட்டுச்சென்ற அந்த துப்பாக்கியை எடுத்து பரிசோதித்தனர்.  அப்போது அது பொம்மை துப்பாக்கி என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து போலி ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...