கோவை துடியலூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபரிடம் போலீஸ் என்று கூறி துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : கோவை துடியலூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபரிடம் போலீஸ் என்று கூறி துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜி.என்.மில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஹர்பிர்த் சிங் (60). ரியல் எஸ்டேட் தோழில் செய்து வரும் அவரது வீட்டுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒருவர் போலிசார் போல வந்தார். மேலும், தொழிலில் பாதுகாப்பு தருவதாக கூறினார். இதை ஹர்பிர்த் சிங் மறுத்துள்ளார். இந்த நிலையில், ஹர்பிர்த் சிங் நேற்று தனது காரில் மேட்டுப்பாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது போலீஸ் என்று கூறிய அவரை வழிமறித்த மூன்று பேர் பாதுகாப்பு காரணங்களை சொல்லி அவரது காரில் ஏறினர்.
கார் சிறிது தூரம் சென்றதும், அந்த நபர் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டினார். இதனால் அதிர்ச்சியடைந்த ஹர்பிர்த் சிங் கூச்சலிட்டார்.
இதனால் பயந்து போன மர்ம நபர்கள் துப்பாக்கியை காருக்குள்ளேயே விட்டு விட்டு தப்பி ஓடினர். இந்த சம்பவம் குறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் ஹர்பிர்த் சிங் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர். அத்துடன் காருக்குள் விட்டுச்சென்ற அந்த துப்பாக்கியை எடுத்து பரிசோதித்தனர். அப்போது அது பொம்மை துப்பாக்கி என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து போலி ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
ஜி.என்.மில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஹர்பிர்த் சிங் (60). ரியல் எஸ்டேட் தோழில் செய்து வரும் அவரது வீட்டுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒருவர் போலிசார் போல வந்தார். மேலும், தொழிலில் பாதுகாப்பு தருவதாக கூறினார். இதை ஹர்பிர்த் சிங் மறுத்துள்ளார். இந்த நிலையில், ஹர்பிர்த் சிங் நேற்று தனது காரில் மேட்டுப்பாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது போலீஸ் என்று கூறிய அவரை வழிமறித்த மூன்று பேர் பாதுகாப்பு காரணங்களை சொல்லி அவரது காரில் ஏறினர்.
கார் சிறிது தூரம் சென்றதும், அந்த நபர் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டினார். இதனால் அதிர்ச்சியடைந்த ஹர்பிர்த் சிங் கூச்சலிட்டார்.
இதனால் பயந்து போன மர்ம நபர்கள் துப்பாக்கியை காருக்குள்ளேயே விட்டு விட்டு தப்பி ஓடினர். இந்த சம்பவம் குறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் ஹர்பிர்த் சிங் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர். அத்துடன் காருக்குள் விட்டுச்சென்ற அந்த துப்பாக்கியை எடுத்து பரிசோதித்தனர். அப்போது அது பொம்மை துப்பாக்கி என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து போலி ஆசாமிகளை தேடி வருகின்றனர்.