நல்ல தமிழகம் உருவாக அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்: நடிகர் கமல்

நல்ல தமிழகம் அமைய வேண்டுமெனில் அனைவரும் ஒன்று சேர்ந்து பணியாற்ற வேண்டும் என ஈரோட்டில் தொண்டர்கள் மத்தியில் பேசிய கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்: நல்ல தமிழகம் அமைய வேண்டுமெனில் அனைவரும் ஒன்று சேர்ந்து பணியாற்ற வேண்டும் என ஈரோட்டில் தொண்டர்கள் மத்தியில் பேசிய கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி நிறுவனர் கமலஹாசன் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ள நிலையில் அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் வரவேற்பு அளித்தனர். சித்தோடு அருகே உள்ள மாமரத்து பாளையம் என்ற பகுதியில் உள்ள  சக்தி  மசாலா தொண்டு  நிறுவனத்தின் மாற்றுத்திறனாளிகளுக்கான  சிறப்பு  தொழிற் பயிற்சியினை தொடங்கி வைத்தார்.

பின்னர் பேசிய கமல், உங்களை நம்பித்தான் அரசியலுக்கு வந்திருக்கின்றேன். நல்ல தமிழகம் அமைய வேண்டுமென்றால்  நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பணியாற்ற வேண்டும். நமக்கான பணிகள் நிறைய இருக்கின்றதால், நாம் அனைவரும் அதில் கவனம் செலுத்த வேண்டும். உங்களை பார்க்கும் போது நாளை நமதே என்று நிச்சயம் நிறைவேறும் என்று நம்புகிறேன், இவ்வாறு  கூறினார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...