கோவை பீளமேடு அரசு மருத்துவ கல்லூரி எதிரே காலியாக இருந்த இடத்தில் ஏற்பட்ட தீ மளமளவென பரவியதில் பொதுமக்கள் அவதி.
கோவை: கோவை பீளமேடு அரசு மருத்துவ கல்லூரி எதிரே காலியாக இருந்த இடத்தில் ஏற்பட்ட தீ மளமளவென பரவியதில் பொதுமக்கள் அவதி.
பீளமேடு பகுதியில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி எதிரே உள்ள காலியான இடத்தில் காய்ந்த செடிகள் மற்றும் சிறிய மரங்கள் இருந்த இடத்தில் இன்று மதியம் 12 மணியளவில் தீ பிடித்தது. தீ மளமளவென பரவியதால் புகை மூட்டம் ஏற்பட்டதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
அருகில் இருந்த பொதுமக்கள் மற்றும் வணிக அமைப்பினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ கட்டுக்கடங்காமல் பரவியதை தொடர்ந்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து காரணமாக சுமார் அரை மணி நேரம் அப்பகுதி புகை மூட்டமாக காணப்பட்டது. இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.
மேலும், தீ ஏற்பட்ட இடத்தின் பின்புறம் வீடுகளும், மாணவர்கள் தங்கி பயிலும் அறைகள் ஏராளமாக உள்ளன. விரைவாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.