பீளமேடு அரசு மருத்துவ கல்லூரி அருகே தீ விபத்து: பொதுமக்கள் அவதி

கோவை பீளமேடு அரசு மருத்துவ கல்லூரி எதிரே காலியாக இருந்த இடத்தில் ஏற்பட்ட தீ மளமளவென பரவியதில் பொதுமக்கள் அவதி.


கோவை: கோவை பீளமேடு அரசு மருத்துவ கல்லூரி எதிரே காலியாக இருந்த இடத்தில் ஏற்பட்ட தீ மளமளவென பரவியதில் பொதுமக்கள் அவதி.

பீளமேடு பகுதியில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி எதிரே உள்ள காலியான இடத்தில் காய்ந்த செடிகள் மற்றும் சிறிய மரங்கள் இருந்த இடத்தில் இன்று மதியம் 12 மணியளவில் தீ பிடித்தது. தீ மளமளவென பரவியதால் புகை மூட்டம் ஏற்பட்டதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

அருகில் இருந்த பொதுமக்கள் மற்றும் வணிக அமைப்பினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ கட்டுக்கடங்காமல் பரவியதை தொடர்ந்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து காரணமாக சுமார் அரை மணி நேரம் அப்பகுதி புகை மூட்டமாக காணப்பட்டது. இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். 

மேலும், தீ ஏற்பட்ட இடத்தின் பின்புறம் வீடுகளும், மாணவர்கள் தங்கி பயிலும் அறைகள் ஏராளமாக உள்ளன. விரைவாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...