காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் விட மாட்டோம்: எஸ்.பி.வேலுமணி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் விட மாட்டோம் என உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதியளித்துள்ளார்.

கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் விட மாட்டோம் என உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதியளித்துள்ளார்.

தமிழ்நாடு கைத்தறி ஜவுளித்துறை மற்றும் கோவையில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மேலாண்மை கல்லூரி சார்பில் தொழில்நுட்ப ஜவுளி மைய துவக்க விழா அவினாசி சாலையில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் கல்லூரியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், கலந்து கொண்ட அமைச்சர் ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களிடம் கூறும்போது:- இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக ஜவுளித்துறையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது.

தொழில்நுட்ப ஜவுளி புத்தாக்க முயற்சியை துவங்கி உள்ளதன் மூலம் 13 வகையான புதிய உற்பத்திகளை ஜவுளி துறையில் துவங்க உள்ளது. இது தொழில் புரட்சியை ஏற்படுத்தும். குக்கர் சின்னம் டிடிவி தினகரனுக்கு ஒதுக்கியது நீதிமன்ற உத்தரவு என்பதால் கருத்து கூற கூடாது. காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பை அளித்து உள்ளது. சில குறைபாடுகள் இருந்தாலும் விரைவில் காவிரி மேலாண்மை வாரியம் 

அமைக்க வேண்டும் என்பது தான் தங்களது கருத்து. விரைவில் மேலாண்மை வாரியம் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதன் பின்னர் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசுகையில், "காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக தொடர்ந்து தங்களது எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தை முடக்கி உள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டு உள்ளார். தமிழகத்தின் உரிமையை மீட்டு எடுக்க தொடர்ந்து அ.தி.மு.க. பாடுபட்டு வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் விட மாட்டோம்,” என்றார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...