கோவையில் ரசிகர்களை சந்திக்காமல் சென்ற கமல்: ரசிகர்கள் ஏமாற்றம்

திருப்பூர் மற்றும் ஈரோட்டில் கட்சித்தொண்டர்களையும் நற்பணி மன்ற நிர்வாகிகளையும் சந்திப்பதற்காக கோவை விமான நிலையத்திற்கு வந்த கமலஹாசன், விமான தாமதத்தால் அங்கு திரண்டிருந்த ரசிகர்களை சந்திக்காமல் சென்றார்.


கோவை: திருப்பூர் மற்றும் ஈரோட்டில் கட்சித்தொண்டர்களையும் நற்பணி மன்ற நிர்வாகிகளையும் சந்திப்பதற்காக கோவை விமான நிலையத்திற்கு வந்த கமலஹாசன், விமான தாமதத்தால் அங்கு திரண்டிருந்த ரசிகர்களை சந்திக்காமல் சென்றார்.

திருப்பூர் மற்றும் ஈரோட்டில் கட்சித்தொண்டர்களையும் நற்பணி மன்ற நிர்வாகிகளையும் சந்திப்பதற்காக விமானம் மூலம் கோவை வந்தார். கமலஹாசன் வந்த விமானம் அரை மணி நேரமாக தாமதமாக வந்ததால், அவர் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்திக்காமல் செல்வதாக கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.

அப்போது, பத்திரிக்கையாளர்களிடம் கமல் பேசுகையில், நான் வந்திருப்பது நற்பணி மன்ற நண்பர்களையும், கட்சி தோழர்களையும் சந்திப்பதற்காகத்தான். இது பொதுக்கூட்டமோ, மாநாடோ அல்ல, நன்றி வணக்கம். இவ்வாறு கூறினார்.



இதனையடுத்து அவர் அவினாசி அத்திக்கடவு திட்ட குழுவினரை சந்திக்க அவினாசி புறப்பட்டு சென்றார். இந்த பயணத்தின் போது, பெருந்துறை, சித்தோடு பகுதிகளில் ரசிகர்கள் மற்றும் கட்சியினரை சந்தித்துவிட்டு , ஈரோட்டில் மாலை கமலஹாசன் தலைமையில் 2000-க்கும் மேற்பட்டவர்கள் கட்சியில் இணையும் நிகழ்வில் பேசுகிறார். மேலும், இரவு விசைத்தறி உரிமையாளர்களை சந்தித்து பேச உள்ளார்.

கமலஹாசன் பேனர் வைப்பதற்கு போலீசார் அனுமதியளிக்காததை அடுத்து இரண்டு மணி நேரத்திற்கு முன் விமான நிலையத்தில் இருந்து அவினாசி செல்லும் சாலையில் கமலஹாசன் போட்டோ வைத்த பேனர்கள் வைக்கப்பட்டன. 

இதேபோல், ஆளுங்கட்சியினர் மற்றும் எதிர்கட்சியைச் சார்ந்த தலைவர்கள் வந்தால் அவர்களை விமான நிலைய வாயில் அருகே மேளதாளம் முழங்க வரவேற்பது வழக்கம், ஆனால் கமலஹாசன் வருகையையொட்டி பேண்டு மற்றும் ஜமாப்பை நுழைவு வாயில் வெளியில் போலீசார் அடிக்க விடாமல், உள்ளே வந்தவர்களை தூரத்தி, சாலை ஓரத்தில் அடிக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...