சர்வதேச அளவில் முதலிடம் பிடித்த டெல்லி விமான நிலையம்

சர்வதேச விமான நிலைய சேவை தரவரிசை பட்டியலில் இந்தியாவின் டெல்லி விமான நிலையம் முதலிடம் பிடித்துள்ளது.

சர்வதேச விமான நிலைய சேவை தரவரிசை பட்டியலில் இந்தியாவின் டெல்லி விமான நிலையம் முதலிடம் பிடித்துள்ளது. 

சர்வதேச விமான நிலைய கவுன்சில், சர்வதேச அளவில் பரப்பளவு மற்றும் பயணிகள் வந்து செல்லும் விகிதத்தின் அடிப்படையில், விமான நிலையங்களின் சேவைத் தரத்தினை ஆண்டுதோறும் ஆராய்ந்து வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டுக்கான தரவரிசைப்பட்டியலை அந்த கவுன்சில் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் டெல்லி இந்திராகாந்தி விமான நிலையம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த விமான நிலையத்தில் ஆண்டுதோறும் 4 கோடிக்கும் அதிகமான பயணிகள் வந்து செல்கின்றனர். 

மேலும், கடந்த ஆண்டு மட்டும் இங்கு 6 கோடி பயணிகள் வேறு நாடுகளுக்கு பறந்து உள்ளனர். இதன் அடிப்படையில், இந்திராகாந்தி விமான நிலையம் முதலிடம் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் சீனாவின் பெய்ஜிங் விமான நிலையமும், மூன்றாவது இடத்தில் தைவானின் தைபேய் நகர விமான நிலையமும் உள்ளன. கடந்த ஆண்டு தென்கொரியாவின் இன்சியான் விமான நிலையம் இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...