கோவை விமானநிலையத்தில் கிடந்த மர்ம பையால் பரபரப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பையால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை: கோவை சர்வதேச விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பையால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை சித்ரா பகுதியில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு சிங்கப்பூர், மலேசிய, சார்ஜா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு நாள்தோறும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், விமான நிலைய வளாகம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

இந்நிலையில், இன்று காலை விமான நிலைய வளாகத்தின் கார் நிறுத்துமிடத்தில் டிராலியில் வைக்கப்பட்ட பை வெகுநேரமாக யாரும் எடுத்துச்செல்லப்படாமல் இருந்தது. இதனை கவனித்த விமான நிலைய பாதுகாப்பு படையினர் அங்கு சென்று வெடிகுண்டு கண்டறியும் கருவி மூலம் சோதனை செய்தனர்.



பின்னர் அதனை திறந்து பார்த்த போது உடமைகள் மட்டுமே இருந்தன. இதனை பயணிகள் யாரேனும் மறந்து விட்டுச்சென்று இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். பரபரப்பான நேரத்திற்கு மத்தியில் விமான நிலையத்தில் இருந்த மர்ம பையால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...