திருப்பூர் அருகே பி.ஏ.பி., வாய்க்காலில் குழந்தையின் எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்: திருப்பூர் அருகே பி.ஏ.பி., வாய்க்காலில் குழந்தையின் எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்லடம் அருகே பொங்கலூர் தெற்கு அவினாசிபாளையத்திற்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் பி.ஏ.பி., வாய்க்கால் மதகில் நேற்று மாலை குழந்தையின் எலும்புக்கூடுகள் இருந்ததைக் கண்டு அவ்வழியே சென்ற சிலர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவினாசிபாளையம் போலீசார், ஒரு மண்டை ஓடு, கை மற்றும் கால் எலும்புகளைக் கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனை ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பிவைத்தனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த எலும்புக்கூடுகள் சிறுவன் அல்லது சிறுமியுடையதா..? என்பது குறித்து ஆய்விற்குப் பின்னரே தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
மேலும், சமீபத்தில் காணாமல் போன சிறுவன் அல்லது சிறுமியின் உடலாகவும் இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். பல்லடம் அருகே பி.ஏ.பி., வாய்க்காலில் குழந்தையின் எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல்லடம் அருகே பொங்கலூர் தெற்கு அவினாசிபாளையத்திற்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் பி.ஏ.பி., வாய்க்கால் மதகில் நேற்று மாலை குழந்தையின் எலும்புக்கூடுகள் இருந்ததைக் கண்டு அவ்வழியே சென்ற சிலர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவினாசிபாளையம் போலீசார், ஒரு மண்டை ஓடு, கை மற்றும் கால் எலும்புகளைக் கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனை ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பிவைத்தனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த எலும்புக்கூடுகள் சிறுவன் அல்லது சிறுமியுடையதா..? என்பது குறித்து ஆய்விற்குப் பின்னரே தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
மேலும், சமீபத்தில் காணாமல் போன சிறுவன் அல்லது சிறுமியின் உடலாகவும் இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். பல்லடம் அருகே பி.ஏ.பி., வாய்க்காலில் குழந்தையின் எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.