திபெத்தியர்களின் 59ம் ஆண்டு எழுச்சி நாளை முன்னிட்டு உதகையில் திபெத்தியர்களின் பேரணி

நீலகிரி மாவட்டம் உதகையில் திபெத்தியர்களின் 59ம் ஆண்டு எழுச்சி நாளை முன்னிட்டு பேரணி நடத்தப்பட்டது.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் திபெத்தியர்களின் 59ம் ஆண்டு எழுச்சி நாளை முன்னிட்டு பேரணி நடத்தப்பட்டது.



திபெத்தியர்களின் கலாச்சாரம், மதம் மற்றும் தேசத்தினை காப்பாற்ற 1959ம் ஆண்டு மார்ச் 10ம் தேதி ஏற்பட்ட எழுச்சியினை முறியடிக்க சீனாவின் அரசு 1.2 மில்லியன் மக்களை படுகொலை செய்தது. 



அன்றிலிருந்து உலகெங்கிலும் உள்ள திபெத்தியர்கள் மார்ச் 10ம் நாளினை திபெத்தியர்கள் எழுச்சி நாளாக நினைவுப்படுத்தி வருகின்றனர். திபெத்தில் இருக்கும் சீன ஆட்சியை எதிர்த்து 2008, 2009ல் ஏற்பட்ட திபெத் எழுச்சியில் 100க்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் நம்பிக்கை இழந்து தாங்களாகவே உயிர் தியாகம் செய்தனர். இந்நிலையில் திபெத்தியர்களின் எழுச்சி நாளின் 59வது ஆண்டு நினைவு நாள் இன்று உதகையில் உள்ள திபெத்தியர்கள் அனுசரித்தனர். அதன் ஒரு பகுதியாக உதகை ஏடிசி பேருந்து நிலையம் முதல் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்றனர். இந்த பேரணியில் சுமார் 100க்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் கலந்துக் கொண்டனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...