நீலகிரி மாவட்டம் உதகையில் திபெத்தியர்களின் 59ம் ஆண்டு எழுச்சி நாளை முன்னிட்டு பேரணி நடத்தப்பட்டது.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் திபெத்தியர்களின் 59ம் ஆண்டு எழுச்சி நாளை முன்னிட்டு பேரணி நடத்தப்பட்டது.

திபெத்தியர்களின் கலாச்சாரம், மதம் மற்றும் தேசத்தினை காப்பாற்ற 1959ம் ஆண்டு மார்ச் 10ம் தேதி ஏற்பட்ட எழுச்சியினை முறியடிக்க சீனாவின் அரசு 1.2 மில்லியன் மக்களை படுகொலை செய்தது.

அன்றிலிருந்து உலகெங்கிலும் உள்ள திபெத்தியர்கள் மார்ச் 10ம் நாளினை திபெத்தியர்கள் எழுச்சி நாளாக நினைவுப்படுத்தி வருகின்றனர். திபெத்தில் இருக்கும் சீன ஆட்சியை எதிர்த்து 2008, 2009ல் ஏற்பட்ட திபெத் எழுச்சியில் 100க்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் நம்பிக்கை இழந்து தாங்களாகவே உயிர் தியாகம் செய்தனர். இந்நிலையில் திபெத்தியர்களின் எழுச்சி நாளின் 59வது ஆண்டு நினைவு நாள் இன்று உதகையில் உள்ள திபெத்தியர்கள் அனுசரித்தனர். அதன் ஒரு பகுதியாக உதகை ஏடிசி பேருந்து நிலையம் முதல் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்றனர். இந்த பேரணியில் சுமார் 100க்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் கலந்துக் கொண்டனர்.

திபெத்தியர்களின் கலாச்சாரம், மதம் மற்றும் தேசத்தினை காப்பாற்ற 1959ம் ஆண்டு மார்ச் 10ம் தேதி ஏற்பட்ட எழுச்சியினை முறியடிக்க சீனாவின் அரசு 1.2 மில்லியன் மக்களை படுகொலை செய்தது.

அன்றிலிருந்து உலகெங்கிலும் உள்ள திபெத்தியர்கள் மார்ச் 10ம் நாளினை திபெத்தியர்கள் எழுச்சி நாளாக நினைவுப்படுத்தி வருகின்றனர். திபெத்தில் இருக்கும் சீன ஆட்சியை எதிர்த்து 2008, 2009ல் ஏற்பட்ட திபெத் எழுச்சியில் 100க்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் நம்பிக்கை இழந்து தாங்களாகவே உயிர் தியாகம் செய்தனர். இந்நிலையில் திபெத்தியர்களின் எழுச்சி நாளின் 59வது ஆண்டு நினைவு நாள் இன்று உதகையில் உள்ள திபெத்தியர்கள் அனுசரித்தனர். அதன் ஒரு பகுதியாக உதகை ஏடிசி பேருந்து நிலையம் முதல் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்றனர். இந்த பேரணியில் சுமார் 100க்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் கலந்துக் கொண்டனர்.