கர்நாடகா மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் மாட்டு வண்டி மீது லாரி மோதியதில் 9 பேர் பலியாகினர்.
கர்நாடகா : கர்நாடகா மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் மாட்டு வண்டி மீது லாரி மோதியதில் 9 பேர் பலியாகினர்.

குனகுண்டா தாலுகாவில் பஃலேரக்கசாகி என்ற கிராமத்தைச் சேர்ந்த 9 பேரும் அதே கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் வேலை முடித்த பின்பு ராய்ச்சூர்- பெலகாவி தேசிய நெடுஞ்சாலையில் மாட்டுவண்டியில் வந்துகொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த சரக்கு லாரி, மாட்டு வண்டியின் மீது மோதியது. இதில், 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 2 பேர் மருத்துமவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்தது. இந்த விபத்தில் இரண்டு எருதுகளும் பலியானது.

குனகுண்டா தாலுகாவில் பஃலேரக்கசாகி என்ற கிராமத்தைச் சேர்ந்த 9 பேரும் அதே கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் வேலை முடித்த பின்பு ராய்ச்சூர்- பெலகாவி தேசிய நெடுஞ்சாலையில் மாட்டுவண்டியில் வந்துகொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த சரக்கு லாரி, மாட்டு வண்டியின் மீது மோதியது. இதில், 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 2 பேர் மருத்துமவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்தது. இந்த விபத்தில் இரண்டு எருதுகளும் பலியானது.