திருப்பூரில் பனியன் நிறுவன உரிமையாளர் ஏமாற்றி விட்டதாகக் கடிதம் எழுதி வைத்து விட்டு நிறுவனத்திலேயே மேலாளர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பூர் : திருப்பூரில் பனியன் நிறுவன உரிமையாளர் ஏமாற்றி விட்டதாகக் கடிதம் எழுதி வைத்து விட்டு நிறுவனத்திலேயே மேலாளர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கொங்கு மெயின் ரோடு, அப்பாச்சி நகர் பகுதியில் செயல்பட்டு வரும் ஏ.என். அசோசியேட்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் சுதிர். இந்த நிறுவனத்தில் மேலாளராகப் பணி புரிந்து வருபவர் பழனிநாதன். இந்நிலையில், பழனிநாதனின் பெயரை பயன்படுத்தி பனியன் நிறுவனம் ஒன்றை கூடுதலாக சுதிர் நடத்தி வந்தார். அதில், நஷ்டம் ஏற்படவே வியாபாரம் செய்து வந்தவர்கள் பழனிநாதனிடம் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்து வந்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து சுதிரிடம் கேட்ட போது, தனக்கு இதுகுறித்து எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார்.
இதனால், மனஉளைச்சலுக்குள்ளான பழனிநாதனை கடன்காரர்கள் மீண்டும் நெருக்கடி கொடுத்துள்ளதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து வடக்கு போலீசில் விநியோகஸ்தகர்கள் புகார் அளித்ததால், போலீசார் வழக்குப் பதியாமல் அவர்களுக்குள்ளாகவே பேசி தீர்த்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், விநியோகஸ்தகர்களின் நெருக்கடி அதிகரிக்கவே இன்று காலை நிறுவனம் வந்த பழனிநாதன், இதுகுறித்த விரிவான கடிதம் எழுதி தனது நண்பர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பி வைத்து விட்டு அங்கேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு போலீசார் பிரேதத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொங்கு மெயின் ரோடு, அப்பாச்சி நகர் பகுதியில் செயல்பட்டு வரும் ஏ.என். அசோசியேட்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் சுதிர். இந்த நிறுவனத்தில் மேலாளராகப் பணி புரிந்து வருபவர் பழனிநாதன். இந்நிலையில், பழனிநாதனின் பெயரை பயன்படுத்தி பனியன் நிறுவனம் ஒன்றை கூடுதலாக சுதிர் நடத்தி வந்தார். அதில், நஷ்டம் ஏற்படவே வியாபாரம் செய்து வந்தவர்கள் பழனிநாதனிடம் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்து வந்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து சுதிரிடம் கேட்ட போது, தனக்கு இதுகுறித்து எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார்.
இதனால், மனஉளைச்சலுக்குள்ளான பழனிநாதனை கடன்காரர்கள் மீண்டும் நெருக்கடி கொடுத்துள்ளதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து வடக்கு போலீசில் விநியோகஸ்தகர்கள் புகார் அளித்ததால், போலீசார் வழக்குப் பதியாமல் அவர்களுக்குள்ளாகவே பேசி தீர்த்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், விநியோகஸ்தகர்களின் நெருக்கடி அதிகரிக்கவே இன்று காலை நிறுவனம் வந்த பழனிநாதன், இதுகுறித்த விரிவான கடிதம் எழுதி தனது நண்பர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பி வைத்து விட்டு அங்கேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு போலீசார் பிரேதத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.