வனப்பகுதியில் திடீர் காட்டுத் தீ : போராடி அணைத்த வன அதிகாரிகள்

நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் ஏற்பட்ட திடீர் காட்டுத் தீயை வனத்துறையினர் பல மணி நேரம் போராடி அணைத்தனர்.

நீலகிரி : நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் ஏற்பட்ட திடீர் காட்டுத் தீயை வனத்துறையினர் பல மணி நேரம் போராடி அணைத்தனர். 



சிங்காரா சரகம் மருந்து குடோன் பகுதியில் திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது. இதனால், சுமார் 10 ஏக்கர் பரப்பளவிலான வனப்பகுதியில் இருந்த மரங்கள் பற்றி எரிந்தன. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் 30-க்கும் மேற்பட்டோர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு காட்டுத் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. 



இந்த தீயினால் விலையுயர்ந்த மரங்கள் மற்றும் மூலிகை மரங்கள் எரிந்து நாசமாகின. மேலும், வனப்பகுதிக்கு தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...