நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் ஏற்பட்ட திடீர் காட்டுத் தீயை வனத்துறையினர் பல மணி நேரம் போராடி அணைத்தனர்.
நீலகிரி : நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் ஏற்பட்ட திடீர் காட்டுத் தீயை வனத்துறையினர் பல மணி நேரம் போராடி அணைத்தனர்.

சிங்காரா சரகம் மருந்து குடோன் பகுதியில் திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது. இதனால், சுமார் 10 ஏக்கர் பரப்பளவிலான வனப்பகுதியில் இருந்த மரங்கள் பற்றி எரிந்தன. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் 30-க்கும் மேற்பட்டோர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு காட்டுத் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்த தீயினால் விலையுயர்ந்த மரங்கள் மற்றும் மூலிகை மரங்கள் எரிந்து நாசமாகின. மேலும், வனப்பகுதிக்கு தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிங்காரா சரகம் மருந்து குடோன் பகுதியில் திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது. இதனால், சுமார் 10 ஏக்கர் பரப்பளவிலான வனப்பகுதியில் இருந்த மரங்கள் பற்றி எரிந்தன. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் 30-க்கும் மேற்பட்டோர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு காட்டுத் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்த தீயினால் விலையுயர்ந்த மரங்கள் மற்றும் மூலிகை மரங்கள் எரிந்து நாசமாகின. மேலும், வனப்பகுதிக்கு தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.