முதுமலையில் வறட்சியின் கோர தாண்டவத்திற்கு ஆண் யானை பலி

நீலகிரி மாவட்டம் முதுமலையில் வறட்சியின் காரணமாக 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்தது.


நீலகிரி : நீலகிரி மாவட்டம் முதுமலையில் வறட்சியின் காரணமாக 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்தது. 

முதுமலை புலிகள் காப்பகத்தில் பசுமை குறைந்து கடும் வறட்சி நிலவி வருகிறது. வனப்பகுதியின் உள்பகுதியில் ஓம் பெட்டா, கேம் அட் ஆகிய இடங்களில் வனவிலங்குகளுக்கு தேவையான குடிநீர் இருப்பினும், ஒரு சில குளங்கள் நீரின்றி வற்றி போயுள்ளன. வனத்துறையினர் விலங்குகளின் தேவைக்காக தினம்தோறும் இந்தக் குளங்களில் தண்ணீர் நிரப்பி வருகின்றனர்.

இந்நிலையில், கார்குடி சரகத்துக்கு உட்பட்ட நெல்லிக்கரை பகுதியில் யானை இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. புலிகள் காப்பக கள இயக்குநர் ஸ்ரீனிவாச ஆர். ரெட்டி, சரகர் ராஜேந்திரன், கால்நடை மருத்துவர் பிரபு ஆகியோர் அங்கு சென்று யானையை ஆய்வு செய்தனர். வனத்துறையினர், பிரேத பரிசோதனை செய்து தந்தங்களை நீக்கிய பின் யானையின் உடலை வன விலங்குகளுக்கு உணவாக அங்கேயே விட்டனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறும் போது, "யானை இறந்து 10 தினங்கள் ஆகியிருக்கலாம். உடல் அழுகிய நிலையில் இருந்தது. வனவிலங்குகள் யானையின் உடலை தின்றிருந்தன. சுமார் 15 வயதுக்கு உட்பட்ட ஆண் யானை உணவு நீர் உண்ணாமல் வறட்சியின் காரணமாக இறந்துள்ளது" என்றனர். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...