ஆசிரியர் பணி நியமனத்தில் விதிமீறல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டி கோவை மாநகராட்சி அனைத்து ஆசிரியர்கள் சங்கத்தினர் மாநகராட்சி ஆணையாளரிடம் இன்று மனு அளித்தனர்.
கோவை : ஆசிரியர் பணி நியமனத்தில் விதிமீறல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டி கோவை மாநகராட்சி அனைத்து ஆசிரியர்கள் சங்கத்தினர் மாநகராட்சி ஆணையாளரிடம் இன்று மனு அளித்தனர்.

முன்னதாக, இது குறித்து கோவை மாநகராட்சி அனைத்து ஆசிரியர்கள் சங்கத்தின் கொள்கை விளக்க செயலாளர் ஸ்ரீதர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'கல்வி அலுவலரின் தவறான செயல்பாடுகளால் ஆசிரியர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளோம். சென்ற ஆண்டு தமிழக அரசால் கோவைக்கு வழங்கப்பட்ட 11 புதிய முதுகலை பணியிடங்கள் இன்று வரை நிரப்பப்படவில்லை. கடந்த நான்கு ஆண்டுகளாக கோவை மாநகராட்சியில் இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர்கள் TRB/TET தேர்வுகள் மூலம் நியமிக்கப்படாமல், அரசு விதிகளை மீறி, பணி மாறுதல் மூலம் மட்டுமே நியக்கமிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும், அரசு விதிகளுக்கு புறம்பாக ஆசிரியர்களை இடமாற்றம் செய்வது, ஏழு ஆண்டுகளாக மாநகராட்சி பள்ளிகளின் தரம் உயர்த்தப்படுவதற்கு எந்த நடவடிக்கைகளும் எடுக்காமல் இருப்பது போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் கல்வி அதிகாரிகள் உடனடியாக தீர்வு காண வேண்டும்' என்றார்.
கல்வி அதிகாரிகளிடம் மனு அளிப்பதற்கு முன்பு, மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் கூட்டம் நடைபெற்றது. சுமார் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இதில் கலந்து கொண்டனர்.

முன்னதாக, இது குறித்து கோவை மாநகராட்சி அனைத்து ஆசிரியர்கள் சங்கத்தின் கொள்கை விளக்க செயலாளர் ஸ்ரீதர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'கல்வி அலுவலரின் தவறான செயல்பாடுகளால் ஆசிரியர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளோம். சென்ற ஆண்டு தமிழக அரசால் கோவைக்கு வழங்கப்பட்ட 11 புதிய முதுகலை பணியிடங்கள் இன்று வரை நிரப்பப்படவில்லை. கடந்த நான்கு ஆண்டுகளாக கோவை மாநகராட்சியில் இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர்கள் TRB/TET தேர்வுகள் மூலம் நியமிக்கப்படாமல், அரசு விதிகளை மீறி, பணி மாறுதல் மூலம் மட்டுமே நியக்கமிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும், அரசு விதிகளுக்கு புறம்பாக ஆசிரியர்களை இடமாற்றம் செய்வது, ஏழு ஆண்டுகளாக மாநகராட்சி பள்ளிகளின் தரம் உயர்த்தப்படுவதற்கு எந்த நடவடிக்கைகளும் எடுக்காமல் இருப்பது போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் கல்வி அதிகாரிகள் உடனடியாக தீர்வு காண வேண்டும்' என்றார்.
கல்வி அதிகாரிகளிடம் மனு அளிப்பதற்கு முன்பு, மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் கூட்டம் நடைபெற்றது. சுமார் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இதில் கலந்து கொண்டனர்.