உதகையில் 122-வது மலர்கண்காட்சி வரும் மே 18-ம் தேதி தொடக்கம்

உதகையில் கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மலர் கண்காட்சி வரும் மே 18-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறும் என தோட்டக்கலைத்துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.

உதகை : உதகையில் கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மலர் கண்காட்சி வரும் மே 18-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறும் என தோட்டக்கலைத்துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.  



மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நிலவுவது வழக்கம். இச்சமயங்களில் வெளிநாட்டு மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் லட்சக்கணக்கில் உதகைக்கு வருவது வழக்கம். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளைக் கவர தோட்டக்கலைத்துறை, சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, காய்கறி கண்காட்சி, பழக் கண்காட்சி உட்பட பல்வேறு கோடை விழாக்கள் நடத்தப்படுவது வழக்கம். 

இந்நிலையில் இந்தாண்டுக்கான கோடை விழாக்கள் குறித்து இன்று உதகை அரசு தாவரவியல் பூங்காவில் தோட்டக்கலைத்துறை இயக்குநர் சுப்பையன் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- உலகப் புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்காவில் வரும் மே மாதம் 18,19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் 122-வது மலர் கண்காட்சியும், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மே 26 மற்றும் 27-ம் தேதி 60-வது பழக்கண்காட்சியும் நடக்கிறது. இதேபோல, ரோஜா பூங்காவில் 12,13 ஆகிய தேதிகளில் 16-வது ரோஜா கண்காட்சியும், கோத்தகிரி நேரு பூங்காவில் மே 5,6 ஆகிய தேதிகளில் 10-வது காய்கறி கண்காட்சியும், கூடலூரில் 8-வது வாசனை திராவிய கண்காட்சி மே 11,12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறும். இவ்வாறு கூறினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உடனிருந்தார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...