ஐ.என்.எக்ஸ். முறைகேடு வழக்கு : கார்த்தி சிதம்பரத்திற்கு மேலும் 3 நாள் காவல்

ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்தின் நீதிமன்ற காவல், மேலும் 3 நாட்களுக்கு நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்தின் நீதிமன்ற காவல், மேலும் 3 நாட்களுக்கு நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஐ.என்.எக்ஸ்., மீடியா என்ற நிறுவனம் விதிமுறைகளை மீறி அதிக அளவில் அன்னிய முதலீட்டை பெற்றதாக சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். அப்போதைய, மத்திய நிதியமைச்சரின் சிதம்பரத்தின் மகன் கார்த்தி, நிதியமைச்சக அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி, இந்த முறைகேட்டிற்கு உதவியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. 

இது தொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையில், கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதியன்று கார்த்தி சிதம்பரத்தை சென்னை விமான நிலையத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்து டெல்லி அழைத்து சென்றனர். அங்கு நீதிமன்ற உத்தரவுப்படி, அவரை ஒருநாள் காவலில் எடுத்து விசாரித்த சி.பி.ஐ., அதிகாரிகள், தொடர்ந்து, மேலும் 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், இந்த சி.பி.ஐ., காவல் முடிந்த நிலையில் டெல்லி நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரத்தை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அப்போது, விசாரணை முடிவடையாத காரணத்தினால், கார்த்தியை மேலும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என சி.பி.ஐ., அதிகாரிகள் மனு தாக்கல் செய்தனர். இதனையடுத்து, கார்த்தி சிதம்பரத்தை மேலும் 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது. விசாரணை முடிந்த பின்னர் வரும் திங்கட்கிழமை (மார்ச் 12) பிற்பகல் 12 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டனர். 

ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை, வரும் 20-ம் தேதி வரை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு டெல்லி நீதிமன்ற தடை விதித்துள்ளது. இது தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கும், அமலாக்கத்துறைக்கும் சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...