வால்பாறையில் வனத் துறையினருக்கு வன உயிரின மீட்பு மற்றும் மறுவாழ்வு பயிற்சி அளிக்கப்பட்டது.
கோவை: வால்பாறையில் வனத் துறையினருக்கு வன உயிரின மீட்பு மற்றும் மறுவாழ்வு பயிற்சி அளிக்கப்பட்டது.

அட்டக்கட்டியில் வனத்துறையினர் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. அங்கு பொள்ளாச்சி, மானாம்பள்ளி, வால்பாறை, அமராவதி, டாப்சிலிப் ஆகிய வனச்சரகங்களுக்கு உட்பட்ட வனத்துறையினருக்கு வன உயிரின மீட்பு மற்றும் மறுவாழ்வு குறித்து பயிற்சி நேற்றும், இன்றும் இரு தினங்கள் நடைபெற்றது.

இப்பயிற்சியில் வன உயிர்கள் ஆபத்தான நிலையில் இருந்தாலோ, வன உயிரினங்களுடன் மோதல் ஏற்பட்டாலோ எவ்வாறு நடந்து கொள்வது?, மற்றும் மயக்க ஊசி எவ்வாறு செலுத்துவது?, சிறுத்தை போன்ற விலங்குகளை வலையில் எவ்வாறு வீழ்த்துவது? போன்ற பல்வேறு மாதிரி விளக்கங்களுடன் பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

இப்பயிற்சி முகாமில் தமிழ்நாடு முதன்மை வன பாதுகாவலர் கணேசன், மாவட்ட வன அலுவலர் முகமது சபாப் மற்றும் வனத்துறை ஊழியர்கள் பங்கேற்றனர்.