பல்லடத்தில் 700 ஆண்டுகள் பழமையான கோவிலின் மேற்கூரை இடிந்து விபத்து

பல்லடம் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த ஈஸ்வரன் கோவிலின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

திருப்பூர்: பல்லடம் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த ஈஸ்வரன் கோவிலின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கரைப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்டது அல்லாளபுரம். இங்கு ஸ்ரீ உண்ணாமுலையம்மன் உடனமர் உலகேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. பாண்டியர்களின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. 700 ஆண்டுகள் மிகவும் பழமையான இக்கோவில் தற்போது அறநிலையத்துறை வசம் உள்ளது.



1995-ல் கும்பாபிசேகம் நடத்தப்பட்ட இக்கோவிலில் அதற்கு பிறகு எந்த விதமான விழாக்களும் நடைபெறவில்லை என இப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த நிலையில், நீண்ட நாட்களாக பராமரிப்பில் இல்லாத கோவிலின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததது. பக்தர்கள் குறைவான அளவே இருந்த காரணத்தினால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. நீண்ட நாட்களாக மாவட்ட நிர்வாகத்திடமும், இந்து சமய அறநிலைய அதிகாரிகளிடம் இது குறித்து பலமுறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.



கோவிலுக்குச் சொந்தமாக 450 ஏக்கர் நிலம் உள்ளதாகவும் அதனை மீட்டுத்தர வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...