பல்லடம் அருகே ஆறாக்குளம் குட்டையில் நீரில் மூழ்கி பள்ளி மாணவன் உட்பட இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்: பல்லடம் அருகே ஆறாக்குளம் குட்டையில் நீரில் மூழ்கி பள்ளி மாணவன் உட்பட இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் வடுகபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். அப்பகுதியிலுள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இவரது நண்பர் மூவேந்தர்.
இந்நிலையில், நேற்று அவர்கள் இருவரும் விளையாடுவதற்காகச் சென்றனர். ஆனால், மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் இருவரையும் தேடி கொண்டிருந்தனர்.
இதனை தொடர்ந்து, பல்லடம் அருகேயுள்ள ஆறாக்குளம் குட்டையில் இன்று காலை இருவரின் சடலம் மிதப்பதாக காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்திற்குச் சென்ற, பல்லடம் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் இருவரது சடலங்களையும் மீட்டனர்.

விசாரணையில் இறந்தது பள்ளி மாணவர் ஜெயபிரகாஷ், மற்றும் அவரது நண்பர் மூவேந்தர் என்பது தெரிய வந்தது.
மாணவர்கள் மீன்பிடிக்கச் சென்ற போது நீச்சல் தெரியாமல் குட்டையில் விழுந்து உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். குட்டையில் மூழ்கி இருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் வடுகபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். அப்பகுதியிலுள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இவரது நண்பர் மூவேந்தர்.
இந்நிலையில், நேற்று அவர்கள் இருவரும் விளையாடுவதற்காகச் சென்றனர். ஆனால், மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் இருவரையும் தேடி கொண்டிருந்தனர்.
இதனை தொடர்ந்து, பல்லடம் அருகேயுள்ள ஆறாக்குளம் குட்டையில் இன்று காலை இருவரின் சடலம் மிதப்பதாக காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்திற்குச் சென்ற, பல்லடம் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் இருவரது சடலங்களையும் மீட்டனர்.

விசாரணையில் இறந்தது பள்ளி மாணவர் ஜெயபிரகாஷ், மற்றும் அவரது நண்பர் மூவேந்தர் என்பது தெரிய வந்தது.
மாணவர்கள் மீன்பிடிக்கச் சென்ற போது நீச்சல் தெரியாமல் குட்டையில் விழுந்து உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். குட்டையில் மூழ்கி இருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
