கோவை வனப்பகுதியில் ஏற்பட்டுவரும் வறட்சியை எதிர்கொள்ளும் வகையில் வனப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது வனத்துறை.
கோவை: கோவை வனப்பகுதியில் ஏற்பட்டுவரும் வறட்சியை எதிர்கொள்ளும் வகையில் வனப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது வனத்துறை.
இது குறித்து மாவட்ட வன அலுவலர் என்.சதீஷ் கூறுகையில், "கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 105 தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு அதில் தண்ணீர் நிரப்பும் பணியை மேற்கொண்டு வருகிறோம்.
இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இதனை முறையாக பராமரித்து வருகின்றனர். வறட்சியின் போது வன விலங்குகள் காட்டுப் பகுதியை விட்டு வெளியேறாமல் இருப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நிலத்தடி நீர் மட்டம் குறையாமல் இருப்பதற்காகவும், சீதோஷன நிலை சீராக இருக்கவும், முதற்கட்டமாக பத்து ஹெக்டேர் நிலங்களில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. கோடை மழை கிடைக்கும் வரையில் தொட்டிகளில் சேகரிக்கப்படும் தண்ணீர் வன விலங்குகளுக்குப் பயன்படும். இந்த கோடை மழை 130 மில்லி மீட்டர் வரை மழையைத் தரும் என்று வேளாண் பலகலைக்கழகம் கணித்துள்ளது. இருந்த போதும் வரு மே மாதம் வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும், 38.5 டிகிரி வரை வெப்பம் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே தேவையான பணிகளை வனத்துறை மேற்கொண்டு வருகிறது." என்றார்.
இது குறித்து மாவட்ட வன அலுவலர் என்.சதீஷ் கூறுகையில், "கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 105 தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு அதில் தண்ணீர் நிரப்பும் பணியை மேற்கொண்டு வருகிறோம்.
இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இதனை முறையாக பராமரித்து வருகின்றனர். வறட்சியின் போது வன விலங்குகள் காட்டுப் பகுதியை விட்டு வெளியேறாமல் இருப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நிலத்தடி நீர் மட்டம் குறையாமல் இருப்பதற்காகவும், சீதோஷன நிலை சீராக இருக்கவும், முதற்கட்டமாக பத்து ஹெக்டேர் நிலங்களில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. கோடை மழை கிடைக்கும் வரையில் தொட்டிகளில் சேகரிக்கப்படும் தண்ணீர் வன விலங்குகளுக்குப் பயன்படும். இந்த கோடை மழை 130 மில்லி மீட்டர் வரை மழையைத் தரும் என்று வேளாண் பலகலைக்கழகம் கணித்துள்ளது. இருந்த போதும் வரு மே மாதம் வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும், 38.5 டிகிரி வரை வெப்பம் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே தேவையான பணிகளை வனத்துறை மேற்கொண்டு வருகிறது." என்றார்.