வறட்சியை எதிர்கொள்ள வன விலங்குகளுக்கு தண்ணீர் வழங்கும் பணி தீவிரம்

கோவை வனப்பகுதியில் ஏற்பட்டுவரும் வறட்சியை எதிர்கொள்ளும் வகையில் வனப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது வனத்துறை.

கோவை: கோவை வனப்பகுதியில் ஏற்பட்டுவரும் வறட்சியை எதிர்கொள்ளும் வகையில் வனப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது வனத்துறை. 

இது குறித்து மாவட்ட வன அலுவலர் என்.சதீஷ் கூறுகையில், "கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 105 தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு அதில் தண்ணீர் நிரப்பும் பணியை மேற்கொண்டு வருகிறோம்.

இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இதனை முறையாக பராமரித்து வருகின்றனர். வறட்சியின் போது வன விலங்குகள் காட்டுப் பகுதியை விட்டு வெளியேறாமல் இருப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நிலத்தடி நீர் மட்டம் குறையாமல் இருப்பதற்காகவும், சீதோஷன நிலை சீராக இருக்கவும், முதற்கட்டமாக பத்து ஹெக்டேர் நிலங்களில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. கோடை மழை கிடைக்கும் வரையில் தொட்டிகளில் சேகரிக்கப்படும் தண்ணீர் வன விலங்குகளுக்குப் பயன்படும். இந்த கோடை மழை 130 மில்லி மீட்டர் வரை மழையைத் தரும் என்று வேளாண் பலகலைக்கழகம் கணித்துள்ளது. இருந்த போதும் வரு மே மாதம் வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும், 38.5 டிகிரி வரை வெப்பம் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே தேவையான பணிகளை வனத்துறை மேற்கொண்டு வருகிறது." என்றார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...